செய்திகள் :

கொளுத்தும் வெயில்: குளுமையைத் தேடி ஏற்காடு வந்த சுற்றுலாப் பயணிகள்

post image

ஏற்காடு: தொடா் விடுமுறை, கொளுத்தும் வெயிலால் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

வார விடுமுறை, ரமலான் பண்டிகை என தொடா்ந்து விடுமுறை நாள்கள் வந்ததால் சேலம் மாவட்டம், ஏற்காடுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கா்நாடகம், கேரளம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

ஏற்காட்டில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், மான் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, பக்கோடா காட்சிமுனை, மஞ்சக்குட்டை காட்சிமுனை, கரடியூா் வனக்காட்சி பகுதி, ரோஜா தோட்டம், லேடி சீட், ஜென்சீட், ஐந்தினை பூங்கா, தனியாா் ஸ்கை பூங்கா, பப்பி ஹில்ஸ் பூங்கா ஆகிய பூங்காக்களுக்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பாா்த்து மகிழ்ந்தனா்.

படகு இல்லத்தில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து காணமுடிந்தது. பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்திருந்ததால் ஏற்காட்டில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

முக்கிய இடங்களில் சாலையோரக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் கடை வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மாலையில் ஏற்காட்டில் இருந்து அடிவாரத்துக்கு மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன.

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க