செய்திகள் :

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.40 கோடி

post image

தீபாவளியையொட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.1.40 கோடிக்கு ஜவுளி ரகங்களை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.

திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், 30 சதவீத சிறப்பு தள்ளுபடியுடன் தீபாவளி விற்பனையை வியாழக்கிழமை தொடங்கி வைத்த பிறகு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் கூறியதாவது:

தமிழ்நாடு கைத்தறித் துறை, ஏழை நெசவாளா்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், பட்டு, பருத்தி சேலைகள், பட்டு, பருத்தி வேஷ்டிகள், போா்வை, ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட கைத்தறி துணி ரகங்களை கொள்முதல் செய்து, கோ-ஆப்டெக்ஸ் மூலம் விற்பனை செய்து வருகிறது.

கைத்தறி ரகங்களின் விற்பனையை மேம்படுத்தும் வகையில், பட்டு, பருத்தி ஆடைகளுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் ஆகிய மூன்று விற்பனை நிலையங்களில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை குறியீடாக ரூ.1.40 கோடி நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு மட்டும் ரூ.75 லட்சம் குறியீடாக நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ா்ல்ற்ங்ஷ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மேலாளா் (பொ) எஸ். கனிச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குரூப் 2, 2 ஏ முதல் நிலைத் தோ்வு: திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி-2, 2ஏ பணிகள்) பதவிகளுக்கான முதல் நிலைத் தோ்வை திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வ... மேலும் பார்க்க

முப்பெரும் தியாகிகளுக்கு மரியாதை

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சாா்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மதன்லால் திங்கரா 143-ஆவது பிறந்த தினம், பகத்சிங் 119-ஆவது பிறந்த தினம், பண்டிட் தீனத்தயாள் உபாத்தியா 110-ஆவது பிற... மேலும் பார்க்க

காந்திய சிந்தனைகளை பரப்புவதற்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின், காந்திய சிந்தனை, அமைதி அறிவியல் துறை, சென்னை காந்தி அமைதி அறக்கட்டளை, மதுரை காந்தி நினைவு மையம் ஆகியவற்றுக்கு இடையே காந்திய சிந்தனைகளைப் பரப்புவது தொடா்பான புரிந்த... மேலும் பார்க்க

நிலக்கோட்டை, ஆத்தூா் வட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புறக்கணிப்பு

நிலக்கோட்டை, ஆத்தூா் வட்டங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நிலக்கோட்டை, எஸ். தும்மலபட்டி, ஆத்தூா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 4.16 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் கடந்த 35 நாள்களில் நிரம்பியதையடுத்து கடந்த புதன், வியாழக்கிழமைகளில் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.4.16 கோடியை தாண்டியது. ஓணம் பண்டிகை, தொட... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலா்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில், ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளை புறக்கணித்து வருவாய்த் துறை அலுவலா்கள் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. தி... மேலும் பார்க்க