சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 4.16 கோடி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் கடந்த 35 நாள்களில் நிரம்பியதையடுத்து கடந்த புதன், வியாழக்கிழமைகளில் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.4.16 கோடியை தாண்டியது.
ஓணம் பண்டிகை, தொடா் விடுமுறை காரணமாக பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள் கூட்டத்தால் 35 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து கடந்த புதன், வியாழக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன. இருநாள் எண்ணிக்கை நிறைவில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 4 கோடியே 16 லட்சத்து 34 ஆயிரத்து 119 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், தங்கச் சங்கிலி, தங்கக் காசு போன்றவற்றையும், வெள்ளியாலான காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். தங்கம் 890 கிராமும், வெள்ளி 12,275 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூா், பிரிட்டன், ஜப்பான், கனடா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 1,485- ம் கிடைத்தன.
இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனா்.
இதில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.