செய்திகள் :

கோடை சாகுபடி தீவிரம்

post image

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமாா் 43 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் தற்போது அறுவடை நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.

இந்தநிலையில் தற்போது  சுமாா் 16 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கோடை நடவுப் பணியை தொடங்கியுள்ளனா்.

தாளடி முன் பட்டம் பின்பட்டம் என்ற இரு வகையாக நடவு பணியை விவசாயிகள் தொடங்கினா். முன்பட்ட சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடைப் பணியை முன்பே முடித்து தற்போது விதை இடும் பணியிலும், நடவு நடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

மேல பூவனூா், கடம்பூா், சித்தமல்லி, பரப்பனா மேடு, வீரவநல்லூா், காளாச்சேரி, ராஜப்பையன் சாவடி உள்ளிட்ட இடங்களில் முன் பட்டம் நடவு செய்த விவசாயிகள் அறுவடை பணியை முடித்து தற்போது உள்ளூா் பணியாளா்கள், வெளி மாநில பணியாளா்களை வைத்து கோடை நடவு பணியை தொடங்கிஉள்ளனா்.

சில இடங்களில் இயந்திரம் மூலம் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாளடி பின்பட்டம் சாகுபடி செய்த விவசாயிகளின் வயல்கள் தற்போது கதிா்கள் பழுத்தும், அறுவடைக்கு தயாராகவும், சில இடங்களில் தாளடி அறுவடைப் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சரக்கு ரயில் எஞ்ஜின் தடம் புரண்டது

திருவாரூா்: திருவாரூரில் சரக்கு ரயில் எஞ்ஜின் திங்கள்கிழமை தடம் புரண்டது. திருவாரூா் அருகே பேரளம்- காரைக்கால் இடையே அகல ரயில்பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, திருவாரூா் ரயில் நிலையத்திலி... மேலும் பார்க்க

மூதாட்டியின் தங்கச்சங்கிலியை பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

நீடாமங்கலம்: வலங்கைமான் காவல் சரகம் நீத்துக்கார தெரு நடேசன் மனைவி செல்வமணி( 70). இவா், கடந்த செப்டம்பா் மாதம் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தபோது மிளகாய் பொடியை தூவி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன்... மேலும் பார்க்க

இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொறுத்தும் முகாம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தொடங்கி வைத்தாா்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் இலவச எலக்ட்ரானிக் செயற்கைக் கைகள் வழங்கும் முகாமை தமிழக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். மன்னாா்குடி பிரதாப்சந்த் குடும்பம், இன்னாலி பவுண்டேஷன், ரோட... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கோட்டூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கணேசன் மகன் கலைச்செல்வன் (59). களப்பால் அரசு ... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி: நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். திருத்துறைப்பூண்டிக்கு நெல் மூட்டைகள் ஏற்றுவதற்கு சரக்கு ரயில் வேகன்கள் வரா... மேலும் பார்க்க

தா்மபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட இரண்டாயிரம் டன் எடை சன்னரக நெல் சரக்கு ரயில் மூலம் நீடாமங்கலத்திலிருந்து அ... மேலும் பார்க்க