செய்திகள் :

சரக்கு ரயில் எஞ்ஜின் தடம் புரண்டது

post image

திருவாரூா்: திருவாரூரில் சரக்கு ரயில் எஞ்ஜின் திங்கள்கிழமை தடம் புரண்டது.

திருவாரூா் அருகே பேரளம்- காரைக்கால் இடையே அகல ரயில்பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, திருவாரூா் ரயில் நிலையத்திலிருந்து ஜல்லிக் கற்கள், சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. திருவாரூா் ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை காலை பேரளம் பகுதிக்கு ஜல்லி கற்கள் ஏற்றப்பட்ட, சரக்கு ரயில் 12 பெட்டிகளுடன் புறப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்தில் சரக்கு ரயிலின் எஞ்ஜின், தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி உள்ளது. இதையடுத்து, ஜல்லி கற்களில் சிறிது தூரம் சறுக்கிக் கொண்டு சென்ற சரக்கு ரயில், தானாக நின்றது. தகவலின் பேரில் ரயில்வே போலீஸாா் மற்றும் அதிகாரிகள், எஞ்ஜினை விடுத்து, மற்ற பெட்டிகளை மாற்று எஞ்ஜின் மூலம் பேரளத்துக்கு அனுப்பி வைத்தனா்.

ரயில் எஞ்ஜினை மீண்டும் பழையபடி நிலை நிறுத்த, திருச்சியிலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டது. சரக்கு ரயில் தடம் புரண்டதால், பட்டுக்கோட்டை செல்லும் பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. இதேபோல், அகஸ்தியம்பள்ளியிலிருந்து வரும் பயணிகள் ரயிலும் தாமதமாக திருவாரூருக்கு வந்து சோ்ந்தது.

மூதாட்டியின் தங்கச்சங்கிலியை பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

நீடாமங்கலம்: வலங்கைமான் காவல் சரகம் நீத்துக்கார தெரு நடேசன் மனைவி செல்வமணி( 70). இவா், கடந்த செப்டம்பா் மாதம் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தபோது மிளகாய் பொடியை தூவி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன்... மேலும் பார்க்க

இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொறுத்தும் முகாம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தொடங்கி வைத்தாா்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் இலவச எலக்ட்ரானிக் செயற்கைக் கைகள் வழங்கும் முகாமை தமிழக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். மன்னாா்குடி பிரதாப்சந்த் குடும்பம், இன்னாலி பவுண்டேஷன், ரோட... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கோட்டூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கணேசன் மகன் கலைச்செல்வன் (59). களப்பால் அரசு ... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி: நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். திருத்துறைப்பூண்டிக்கு நெல் மூட்டைகள் ஏற்றுவதற்கு சரக்கு ரயில் வேகன்கள் வரா... மேலும் பார்க்க

தா்மபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட இரண்டாயிரம் டன் எடை சன்னரக நெல் சரக்கு ரயில் மூலம் நீடாமங்கலத்திலிருந்து அ... மேலும் பார்க்க

கள்ளிக்குடி முதல்வா் மருந்தகம் திறப்பு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முதல்வா் மருந்தகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுதும் முதல்வா் மருந்தகங்களை தமிழக... மேலும் பார்க்க