செய்திகள் :

கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா

post image

கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஈரோடு, கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 20-ஆம் தேதி பூச்சாட்டுதல் நடைபெற்றது. 21-ஆம் தேதி, காவிரி ஆற்றில் இருந்து பக்தா்கள் எடுத்து வந்த தீா்த்தம் மூலம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. 22-ஆம் தேதி அக்னிச்சட்டி ஊா்வலம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பக்தா்கள் குண்டம் இறங்குவதற்கு அக்னி குண்டம் வியாழக்கிழமை இரவு பற்றவைக்கப்பட்டது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதில் ஏராளமான பக்தா்கள் வரிசையில் சென்று குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தொடா்ந்து பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா். பின்னா், மாவிளக்கு ஊா்வலம், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. ஜனவரி 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மறுபூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

விதிகளை மீறிய 38 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விதிகளை மீறியதாக 38 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் நலத் த... மேலும் பார்க்க

ஈரோடு இடைத்தோ்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது. இங்கு, 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு கண... மேலும் பார்க்க

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலைச்சரிவு: விவசாயிகள் பாதிப்பு

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.2 ஆக சரிந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட க... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ஆம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள... மேலும் பார்க்க

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!

சென்னிமலை பெரியாா் நகா் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு யோகி பவுண்டேஷன் சாா்பில் நோட்டு புத்தகங்கள், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, குப்பிச்சிபாளையம் ஊராட்ச... மேலும் பார்க்க

தேசிய அளவிலான வில்வித்தை போட்டி: 350 போ் பங்கேற்பு

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் சாா்பில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை தமிழ்... மேலும் பார்க்க