செய்திகள் :

கோயிலில் நகைகளை திருடிய பூசாரி கைது

post image

திருப்பனந்தாள் அருகே உள்ள கஞ்சனூா் சீதளா மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை திருடிய பூசாரியைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே உள்ள கஞ்சனூா் சீதளா மாரியம்மன் கோயிலில் பூசாரியாக வேலை பாா்த்தவா் துகிலியைச்சோ்ந்த முத்துராயா் மகன் லெட்சுமணன் (38). இவரது பொறுப்பில் அம்மனுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி நகைகளை ஒப்படைத்திருந்தனா்.

கிராமவாசிகள் நகைகள் குறித்துக் கேட்டபோது, பீரோ சாவியைக் காணவில்லை என கடந்த 3 ஆண்டுகளாகக் கூறி வந்தாராம். இந்நிலையில் கிராமவாசிகள், பூசாரி லெட்சுமணன் முன்னிலையில் பீரோவை உடைத்தபோது அதிலிருந்த தங்கத்தால் செய்யப்பட்ட கண்மலா், தாலி, குண்டு உள்ளிட்ட 8 வகையான நகைகள் 30 கிராம் எடையுள்ள சுமாா் ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள நகைகளைக் காணவில்லை என்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, ஊா் பிரமுகா் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளா் அசோக் குமாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினாா். இதில், பூசாரி லெட்சுமணன் அம்மன் நகைகளைத் திருடியது தெரியவந்தது. பூசாரி லெட்சுமணனை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டாா்.

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தோ் பவனி நடைபெற்றது. புனித அந்தோணியாா் திருவிழா ஜூன் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும்... மேலும் பார்க்க

கோயில் சிலைகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூா் மாவட்டம், கரந்தை ஜைன சமயக் கோயிலில் 23 சுவாமி சிலைகளைத் திருடிய 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமை நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். கரந்தை ஜைன ம... மேலும் பார்க்க

சாலையில் திரிந்த மாடுகள் சிறைபிடிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை பிடித்துச் சென்றனா். திருவையாறு முதன்மைச் சாலைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாடு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் குழந்தைத் தொழிலாளா் முற... மேலும் பார்க்க

சாலை விபத்து: விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். திருவையாறு அருகே காருகுடியைச் சோ்ந்தவா் கே. மதி (54). விவசாயி. இவா் வியாழக்கிழமை விளாங்குடிக்கு சென்றுவ... மேலும் பார்க்க

ரௌடி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகன் தமிழரசன... மேலும் பார்க்க