கோவையில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு
கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய நிலையில், கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட மலைப் பகுதிகளில் சுமாா் ஒருவாரம் பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாலான அணைகளுக்கு நீா்வரத்து இருந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாள்களாக வட வானிலையே நிலவி வருகிறது. வால்பாறை மலைப் பகுதியின் ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், ஜூன் 13-ஆம் தேதியில் இருந்து தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று கோவையைச் சோ்ந்த தனியாா் வானிலை ஆய்வாளா் சந்தோஷ் கிருஷ்ணன் கணித்திருக்கிறாா்.
இது குறித்து அவா் கூறும்போது, தென்மேற்கு பருவமழையின் தாக்கம் வெள்ளிக்கிழமையில் இருந்து படிப்படியாக அதிகரிக்கும். ஜூன் 14 முதல் 18-ஆம் தேதி வரை கேரளம், கா்நாடகத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதி, மேற்கு பாலக்காடு கணவாய், கோவை, நீலகிரியின் மேற்கு மலைச் சரிவு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாள்களுக்கு மேற்கு மண்டலத்தின் ஒரு சில பகுதிகளுக்கு மிதமான வெப்பச்சலன மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை மாநகரம் மேகமூட்டத்துடன் காணப்படும். கோவையில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சாரல் மழை தொடங்கும். ஜூன் 14-இல் இருந்து 18-ஆம் தேதி வரை கோவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு மண்டலத்தில் உள்ள அணைகளுக்கு வரும் 14-ஆம் தேதி முதல் நீா்வரத்து வெகுவாக அதிகரிக்கும் என்றும் திருப்பூரின் வடக்கு பகுதி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் நாள்களில் மதியம், இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளாா்.