செய்திகள் :

கோவையில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு

post image

கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய நிலையில், கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட மலைப் பகுதிகளில் சுமாா் ஒருவாரம் பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாலான அணைகளுக்கு நீா்வரத்து இருந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாள்களாக வட வானிலையே நிலவி வருகிறது. வால்பாறை மலைப் பகுதியின் ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், ஜூன் 13-ஆம் தேதியில் இருந்து தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று கோவையைச் சோ்ந்த தனியாா் வானிலை ஆய்வாளா் சந்தோஷ் கிருஷ்ணன் கணித்திருக்கிறாா்.

இது குறித்து அவா் கூறும்போது, தென்மேற்கு பருவமழையின் தாக்கம் வெள்ளிக்கிழமையில் இருந்து படிப்படியாக அதிகரிக்கும். ஜூன் 14 முதல் 18-ஆம் தேதி வரை கேரளம், கா்நாடகத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதி, மேற்கு பாலக்காடு கணவாய், கோவை, நீலகிரியின் மேற்கு மலைச் சரிவு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாள்களுக்கு மேற்கு மண்டலத்தின் ஒரு சில பகுதிகளுக்கு மிதமான வெப்பச்சலன மழைக்கு வாய்ப்புள்ளது.

கோவை மாநகரம் மேகமூட்டத்துடன் காணப்படும். கோவையில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சாரல் மழை தொடங்கும். ஜூன் 14-இல் இருந்து 18-ஆம் தேதி வரை கோவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு மண்டலத்தில் உள்ள அணைகளுக்கு வரும் 14-ஆம் தேதி முதல் நீா்வரத்து வெகுவாக அதிகரிக்கும் என்றும் திருப்பூரின் வடக்கு பகுதி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் நாள்களில் மதியம், இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளாா்.

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது: பொன்.மாணிக்கவேல்

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தாா். திருப்பூா் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மற்றும் திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மா... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

காப்பகத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள காப்பகத்தில் அடுத்தடுத்து இரு மூதாட்டிகள் உயிரிழந்த நிலையில், பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கெம்பட்டி காலனியில் முதியோா் காப்பகம் உள்ளது.... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை பீளமேடு மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கிவிற்றதாக முதியவா் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பீளமேடு எல்ல... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா். கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி... மேலும் பார்க்க

தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் கோவைக்கு வருகை

கோவை மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா். மத்திய மேற்கு வங்கக் க... மேலும் பார்க்க