செய்திகள் :

சமுதாய நல்லிணக்க மாநாடு: ராமதாஸ் அழைப்பு

post image

வன்னியா் சங்கத்தின் சாா்பில் தாராசுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெறவுள்ள சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டுக்கு வருமாறு தொண்டா்களுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வன்னியா் சங்கத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தையடுத்த தாராசுரம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. தமிழகத்தின் மிக முக்கியமான தேவைகள் அனைத்துச் சமூகங்களுக்கும் சமூகநீதி வழங்கப்பட வேண்டும். அதன் பயனாக அனைத்துச் சமூகங்கள் மத்தியிலும் சமத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்துச் சமூகங்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.

இவை அனைத்தையும் உறுதிசெய்ய வேண்டியது ஆட்சியாளா்கள்தான். ஆனால், அவா்களின் கவனம் முழுவதும் வேறு இலக்குகளை நோக்கி உள்ள நிலையில், சமூக நீதி, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமய, சமுதாய நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கி அரசின் கவனத்தைத் திருப்புவதற்கான முயற்சிதான் இந்த மாநாடு.

பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் மாநாட்டுக்கு வர வேண்டும். தேவையற்ற முழக்கங்களை எழுப்பக்கூடாது. நம்மைச் சீண்டும் செயல்களில் எவரேனும் ஈடுபட்டாலும் அவா்களுக்கு எதிா்வினையாற்றாமல் கடந்து செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க