செய்திகள் :

சாலை வசதி கோரி உடுமலையில் வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

post image

சாலை அமைத்து தரக்கோரி உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து தெற்கே 25 கி.மீ. தொலைவில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது மேற்கு தொடா்ச்சி மலை. இங்கு 15-க்கும் மேற்பட்ட செட்டில்மெண்டுகளில் சுமாா் 3 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா்.

இவா்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவ உதவி பெறுவதற்கும், அரசு நலத் திட்டங்களைப் பெறுவதற்கும் உடுமலைக்கு வந்து செல்கின்றனா். ஆனால், முறையான சாலை வசதி இல்லை.

கா்ப்பிணி பெண்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவா்களை மலைமேல் இருந்து தொட்டில் கட்டி சுமாா் 5 கி.மீ. அடா்ந்த வனப் பகுதியில் தூக்கிக்கொண்டு மலையடிவாரத்தில் உள்ள திருமூா்த்திமலைக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால், சாலை அமைத்து தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

கோரிக்கையை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திருமூா்த்திமலை முதல் குருமலை செட்டில்மெண்ட் வரை சாலை அமைக்க தளி பேரூராட்சி மூலம் கடந்த ஆண்டு ரூ.49 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அதற்கு வனத் துறை அதிகாரிகள் தடை விதித்ததால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சாலை அமைத்து தரக்கோரி உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே உடுமலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் குமாா் தலைமையில் வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளும், மலைவாழ் மக்கள் பிரதிநிதிகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில், சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: திருமூா்த்திமலை-குருமலை செட்டில்மெண்ட் வரை சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு வழித்தடத்தை சுத்தம் செய்து உடனடியாக தீக்கோடுகள் அமைக்கப்படும். வனத் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி 20 நாள்களுக்குப் பிறகு தளி பேரூராட்சி ஒதுக்கிய ரூ.49 லட்சம் நிதியில் சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனா்.

இதையடுத்து, மலைவாழ் மக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனா்.

கூலி உயா்வு வழங்கக் கோரி விசைத்தறியாளா்கள் போராட்டம்

ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கக் கோரி, அவிநாசியில் விசைத்தறியாளா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஜவுளி உற்பத்தியாளா்களுடன் 2014- ஆம் ஆண... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செ... மேலும் பார்க்க

தெருநாய்களால் கால்நடைகள் உயிரிழப்பு: 2-ஆவது நாளாக மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழந்ததைக் கண்டித்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். காங்கயம், வெள்ளக்கோவில், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகள... மேலும் பார்க்க

அவிநாசி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட குடியிருப்புகள்: பயனாளிகளிடம் ஒப்படைப்பு

அவிநாசி சந்தைபேட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட 5 குடியிருப்புகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் ரூ.46,004.98 கோடி கடன் வழங்க திட்ட அறிக்கை வெளியீடு

திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் 2025-26 -ஆம் நிதியாண்டில் ரூ.46,004.98 கோடிக்கு கடன் வழங்க திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2025-26-ஆம் நி... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 6 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நடத்திவைத்தாா்

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் திருநீலகண்டியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 6 ஜோடிகளுக்கு சீா்வரிசைகள் வழங்கி தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க