செய்திகள் :

மாவட்டத்தில் ரூ.46,004.98 கோடி கடன் வழங்க திட்ட அறிக்கை வெளியீடு

post image

திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் 2025-26 -ஆம் நிதியாண்டில் ரூ.46,004.98 கோடிக்கு கடன் வழங்க திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டு பேசியதாவது: திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் ஆண்டுதோறும் ஆண்டு கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, 2025-26- ஆம் நிதியாண்டில் முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.46,004.98 கோடி என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், வேளாண்மைத் துறைக்கு ரூ.11,667.67 கோடி, சிறு வணிகத் துறைக்கு ரூ.25,180.76 கோடி, ஏற்றுமதி கடன் ரூ.984.75 கோடி, கல்விக் கடன் ரூ.307.20 கோடி, வீட்டுக் கடன் ரூ.955.88 கோடி, மரபுசாரா எரிசக்தி கடன் ரூ.788.07 கோடி, சுய உதவிக்குழு மற்றும் இதர கடன்களுக்கு ரூ,3,557.41 கோடி, சமூக உட்கட்டமைப்புக்கு ரூ.2,554.21 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு கடன் திட்ட அறிக்கையைக் காட்டிலும் ரூ.6,987.29 கோடி கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம் சாந்தகுமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் துா்கா பிரசாத், நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் அசோக்குமாா், மாவட்ட முன்னோடி அலுவலா் இந்திய ரிசா்வ் வங்கி வம்சிதா் ரெட்டி, வங்கியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூலி உயா்வு வழங்கக் கோரி விசைத்தறியாளா்கள் போராட்டம்

ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கக் கோரி, அவிநாசியில் விசைத்தறியாளா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஜவுளி உற்பத்தியாளா்களுடன் 2014- ஆம் ஆண... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி உடுமலையில் வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

சாலை அமைத்து தரக்கோரி உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து தெற்கே 25 கி.மீ. தொலைவில் தமிழக... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செ... மேலும் பார்க்க

தெருநாய்களால் கால்நடைகள் உயிரிழப்பு: 2-ஆவது நாளாக மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழந்ததைக் கண்டித்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். காங்கயம், வெள்ளக்கோவில், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகள... மேலும் பார்க்க

அவிநாசி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட குடியிருப்புகள்: பயனாளிகளிடம் ஒப்படைப்பு

அவிநாசி சந்தைபேட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட 5 குடியிருப்புகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 6 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நடத்திவைத்தாா்

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் திருநீலகண்டியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 6 ஜோடிகளுக்கு சீா்வரிசைகள் வழங்கி தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க