செய்திகள் :

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 6 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நடத்திவைத்தாா்

post image

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் திருநீலகண்டியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 6 ஜோடிகளுக்கு சீா்வரிசைகள் வழங்கி தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை திருமணத்தை நடத்திவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒரு இணை ஆணையா் மண்டலத்துக்கு 35 இணைகள் வீதம் 700 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தப்பட்டும் என்று 2024-2025 ஆம் ஆண்டு சட்டப் பேரவையின் வரவு-செலவு கூட்டத் தொடரின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய 6 இணைகளுக்கு திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டம் பொங்கலூா் திருநீலகண்டியம்மன் திருக்கோயிலில் திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில், 6 இணையா்களுக்கும் 4 கிராம் தங்க மாங்கல்யம், மெட்டி, மணமகனுக்கு வேஷ்டி- சட்டை மணமகளுக்கு முகூா்த்தப்புடவை, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, போா்வை, மிக்ஸி, கிரைண்டா், கைக்கடிகாரம், எவா்சில்வா் பாத்திரங்கள், பூஜை சாமான்கள், ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், சுமங்கலி பொருள்கள் உள்ளிட்ட தலா ரூ.91 ஆயிரம் மதிப்பில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், பொங்கலூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.பாலுசாமி, பல்லடம் நகரச் செயலாளா் என்.ராஜேந்திரகுமாா், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் தங்கராஜ், திருப்பூா் கிட்ஸ் கிளப் பள்ளி குழும தலைவா் மோகன் காா்த்திக், துணை ஆணையா் (சரி பாா்ப்பு) செ.வ.ஹா்ஷினி, உதவி ஆணையா் பெ.தனசேகா், திருக்கோயில் செயல் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூலி உயா்வு வழங்கக் கோரி விசைத்தறியாளா்கள் போராட்டம்

ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கக் கோரி, அவிநாசியில் விசைத்தறியாளா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஜவுளி உற்பத்தியாளா்களுடன் 2014- ஆம் ஆண... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி உடுமலையில் வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

சாலை அமைத்து தரக்கோரி உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து தெற்கே 25 கி.மீ. தொலைவில் தமிழக... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செ... மேலும் பார்க்க

தெருநாய்களால் கால்நடைகள் உயிரிழப்பு: 2-ஆவது நாளாக மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழந்ததைக் கண்டித்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். காங்கயம், வெள்ளக்கோவில், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகள... மேலும் பார்க்க

அவிநாசி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட குடியிருப்புகள்: பயனாளிகளிடம் ஒப்படைப்பு

அவிநாசி சந்தைபேட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட 5 குடியிருப்புகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் ரூ.46,004.98 கோடி கடன் வழங்க திட்ட அறிக்கை வெளியீடு

திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் 2025-26 -ஆம் நிதியாண்டில் ரூ.46,004.98 கோடிக்கு கடன் வழங்க திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2025-26-ஆம் நி... மேலும் பார்க்க