தெருநாய்களால் கால்நடைகள் உயிரிழப்பு: 2-ஆவது நாளாக மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழந்ததைக் கண்டித்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.
காங்கயம், வெள்ளக்கோவில், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும், உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை, மறவபாளையம், சென்னிமலை பகுதிகளில் தெருநாய்கள் கடித்து 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் அண்மையில் உயிரிழந்தன.
இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், உயிரிழந்த ஆடுகளை சாலையில்போட்டு காங்கயம்-சென்னிமலை திட்டுபாறை சாலையில் மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
மாவட்ட எஸ்.பி.கிரிஷ் யாதவ் அசோக், மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் விவசாயிகளுடன் நடைபெற்ற 4 கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வி அடைந்தன.
தொடா்ந்து, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலைத் தொடா்ந்த 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்த போலீஸாா், அவா்களை தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து இரவு விடுவித்தனா்.
இதையடுத்து, 30 மணி நேர சாலை மறியல் முடிவுக்கு வந்து, காங்கயம்-சென்னிமலை சாலையில் போக்குவரத்து தொடங்கியது.
இது தொடா்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் விடியல் எஸ்.சேகா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கயம் பகுதியில் தெருநாய்களால் கால்நடைகள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது.
வாழ்வாதாரம் இழந்து வாடும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய அரசு அவா்களை கைது செய்தது வேதனை அளிக்கிறது. இப்பிரச்னையில் அமைச்சா்கள் தலையிட்டு உரிய இழப்பீடு வழங்குவதுடன், இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.