செய்திகள் :

சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து கவலையில்லை: காசி விஸ்வநாதன்

post image

சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் இந்தத் தோல்விகளுக்கும் எல்லாம் கவலைப்பட மாட்டோம் எனக் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 8இல் 6 போட்டிகளில் தோல்வியுற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் அதிரடியாக விளையாடும் வீரர் இல்லாததால் தடுமாறி வருகிறார்கள்.

ருதுராஜ் காயம் காரணமாக வெளியேற தோனி தலைமையேற்று சிஎஸ்கே அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியதாவது:

சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து கவலையில்லை

நாங்கள் இந்தமுறை சரியாக விளையாடவில்லை. நன்றாக விளையாட முயற்சிக்கிறோம். அடுத்த சில போட்டிகளில் நன்றாக விளையாடுவோம்.

இது வெறுமனே போட்டிதான். நாங்கள் இன்னும் அவசர நிலை பொத்தானை அழுத்தவில்லை. சிஎஸ்கே நிர்வாகம் அதுமாதிரியானதில்லை.

ஒரு அணியாக அனைவரும் நன்றாக விளையாட வேண்டும். தோனி தலைமை ஏற்றதும் எதுவும் மாறவில்லை என அவரை மட்டும் குறைசொல்ல முடியாது.

நாங்கள் சிஎஸ்கே அணியின் நிர்வாகத்திடம் பேசுவதில்லை. அணிக்கு எது நல்லதோ அதைதான் தோனி செய்வார்.

நிர்வாகத்தினராக நாங்கள் சிஎஸ்கே அணியின் நல்ல விளையாட்டை எதிர்பார்க்கிறோம். அணியை விமர்சிப்பதில்லை எனக் கூறியுள்ளார்.

போல்ட் 4 விக்கெட்டுகள், கிளாசன் அதிரடியால் மீண்ட சன்ரைசர்ஸ்: மும்பைக்கு 144 ரன்கள் இலக்கு!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் எடுத்தது.ஐபிஎல் 2025-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்ட... மேலும் பார்க்க

ரிவிவ் கேட்காமல் வெளியேறிய இஷான் கிஷன்: சூதாட்டமா?

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2025-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹை... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு: சன்ரைசர்ஸ் 300 ரன்கள் குவிக்குமா?

சன்ரைசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 2025ஆம் ஆண்டு ஐபிஎல்-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் மும்பை இந்தியன்ஸ், ... மேலும் பார்க்க

பாராட்டி பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்கா! கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்!

பாராட்டி பேச விரும்பிய லக்னௌ அணியின் உரிமையாளரை சஞ்சீவ் கோயங்காவை கண்டுகொள்ளாமல் சென்ற தில்லி அணி வீரர் கே.எல்.ராகுலில் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில்... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்! - திலக் வர்மா

ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கிறது என்று இந்திய டி20 கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரருமான திலக் வர்மா தெரிவித்துள்ளார். ந... மேலும் பார்க்க

விராட் கோலி, டேவிட் வார்னர் சாதனைகளை முறியடித்த கே.எல். ராகுல்!

டேவிட் வார்னர், விராட் கோலி ஆகியோரின் சாதனைகளை முறியடித்து தில்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர் கே.எல்.ராகுல் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிட்டல்ஸ் 8 வ... மேலும் பார்க்க