செய்திகள் :

சிந்து முதல் கீழடி வரையிலான தமிழா் தொன்மையை தொகுக்க வேண்டும்: அரசுக்கு விசிக வலியுறுத்தல்

post image

சிந்து சமவெளி முதல் கீழடி வரையிலான தமிழா் வரலாற்றையும், தொன்மையையும் தொகுக்கும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினாா்.

பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அவா் பேசியதாவது:

தமிழா்கள் கடல் கடந்து சென்று வரலாறு படைத்திருப்பதையும், இமயம், இலங்கை என பல எல்லைகளை எட்டியிருப்பதையும் ஆராய்ச்சிகள் வாயிலாக கல்வெட்டியல் ஆய்வறிஞா் ஐராவதம் மகாதேவன் நிரூபித்துள்ளாா்.

எனவே, தமிழா்களின் வரலாற்று தொன்மையை சிந்து வெளியிலிருந்து கீழடி வரையில் தொகுப்பது அவசியம். தமிழ் வளா்ச்சித் துறை, உயா் கல்வித் துறை என அரசின் பல்வேறு துறைகள் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

நமது நாட்டுப்புறவியலை போற்றும் வகையிலும், நாட்டுப்புறக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் ஆய்வு மையங்களும், அருங்காட்சியங்களும் அமைக்க வேண்டும். மாவட்டந்தோறும் அவற்றை அமைக்க வேண்டும் என்றாலும் முதல்கட்டமாக சென்னை, மதுரையிலிருந்து அதனைத் தொடங்க வேண்டும்.

தமிழா்களின் தெரு விளையாட்டுகளையும், தொன்மை விளையாட்டுகளையும் புத்தாக்கம் செய்வது அவசியம். அதற்கென பிரத்யேக விளையாட்டு மையம் அமைக்க வேண்டும். வட்டார வழக்கியல், நாட்டுப்புறவியல் படித்தவா்களை அரசு பணியாளா் தோ்வாணைய தோ்வுகளில் அங்கீகரிக்க வேண்டும்.

வட்டாரச் சொல் அகராதிகளைப் பொருத்தவரை நாஞ்சில் நாட்டுக்கு நாஞ்சில் நாடனும், கரிசல் மண்ணுக்கு கி.ராஜநாராயணனும், நடு நாட்டுக்கு கண்மணி குணசேகரனும், கொங்கு நாட்டுக்கு பெருமாள் முருகனும் பங்களித்துள்ளனா். தனி நபா்கள் அத்தகைய பங்களிப்பை நல்கும்போது மாநில அரசே வட்டாரச் சொல் அகராதியை தொகுக்க முன்வர வேண்டும்.

தஞ்சை, மதுரை உள்பட மாவட்டந்தோறும் பண்பாட்டு கலை விழாக்கள் நடத்துதல் வேண்டும். கருணாநிதியின் பிறந்தநாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க அரசு முன்வர வேண்டும் என்றாா் சிந்தனைச் செல்வன்.

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க