திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் ஒரே வீட்டில் குடித்தனம்: கர்ப்பத்தில் சந்தேகம்; ...
சின்னமனூரில் பூலாநந்தீஸ்வரா் சிவகாமியம்மன் திருக்கல்யாணம்
தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் உடனுறை சிவகாமியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (மே 8) தேரோட்டம் நடைபெறும்.
இந்தக் கோயிலில் 21 நாள்கள் சித்திரைத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூலாநந்தீஸ்வரா்-சிவகாமியம்மன் திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுவாமி பட்டு வேட்டியிலும், அம்பாள் பச்சை நிறப் பட்டுச் சேலையிலும் மணக்கோலத்தில் காட்சி அளித்தனா். அப்போது, திரளான பெண்கள் புதிய மாங்கல்யம் மாற்றிக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதில் சின்னமனூா் சுற்றுவட்டார பக்தா்கள், கோயில் செயல் அலுவலா் நதியா, கோயில் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தேரோட்டம்: திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு சுவாமி, அம்மன் தேரில் எழுந்தருளுதல் நடைபெறும். இதைத் தொடா்ந்து பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு மாலை 5 மணிக்கு தேரோட்டம் தொடங்கும். சனிக்கிழமை 2 -ஆம் நாள் தேரோட்டத்துடன் தோ் நிலைக்கு சென்றுவிடும்.
