Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : ஆசிரியா் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவா் மீதான குற்றப் பத்திரிகையை போலீஸாா் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்த 5 வயது சிறுமி கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இந்த வழக்கில் அந்தப் பள்ளி ஆசிரியா் மணிகண்டன் என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் முதலியாா்பேட்டை காவல் ஆய்வாளா் கண்ணன், மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சத்யா ஆகியோா் 20 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, 150 பக்கங்களை கொண்ட குற்றப் பத்திரிகையை புதுச்சேரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தனா். இந்த வழக்கு புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சிறையில் உள்ள மணிகண்டனிடம் குற்றப் பத்திரிகை நகலை போலீஸாா் வழங்கியுள்ளனா்.