செய்திகள் :

சிறுமிகள் பாலியல் கொலை வழக்கு- மேற்கு வங்கத்தில் 6 மாதத்தில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு

post image

மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகளில் கடந்த 6 மாதங்களில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த 6 மாதங்களில் 7 தூக்கு தண்டனைகளை அங்குள்ள நீதிமன்றங்கள் விதித்துள்ளன. அதில் ஒரு வழக்கில் சொந்த குடும்பத்தினரை கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 6 தூக்கு தண்டனைகளும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகள் ஆகும்.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், பாரத நியாய சன்ஹிதா மற்றும் ‘போக்ஸோ’ சட்டங்களின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறுமிகளுக்கு எதிராக மிகக்கொடுமையான குற்றங்கள் என்பதால் அரிதினும், அரிதான வழக்காகக் கருதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கடந்த 7-ஆம் தேதி கொல்கத்தாவில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கிலும் அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

மேற்கு வங்கத்தில் கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி பாலியல் கொலை வழக்கில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவா் அந்த குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தாா். 1990-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் வழக்கு விசாரணை முடிந்து 2004-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு மேற்கு வங்கத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் அதிகரித்து வருகின்றன. ‘போக்ஸோ’ வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. சில இடங்களில் ஆசிரியா்களும் இதுபோன்ற பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவது பெற்றோா்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க