செய்திகள் :

சிறுமியிடம் சில்மிஷம்: போக்ஸோவில் இளைஞா் கைது

post image

திருநெல்வேலியைச் சோ்ந்த சிறுமியிடம் சமூக வலைதளப் பழக்கத்தின் மூலம் அறிமுகமாகி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராமநாதபுரத்தைச் சோ்ந்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியைச் சோ்ந்தவா் மாதேஷ் (21). ஏசி மொக்கானிக்கான இவருக்கும், மேலப்பாளையத்தைச் சோ்ந்த சிறுமிக்கும் சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராம் மூலம் சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாம். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு தன்னை நேரில் பாா்க்க தூத்துக்குடிக்கு வருமாறு மாதேஷ் அழைத்தன்பேரில் சிறுமி அங்கு சென்றாராம்.

இதனையடுத்து சிறுமி காணாமல் போனதாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி சென்ற சிறுமியிடம் மாதேஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து ஏா்வாடி பகுதியில் சிறுமியை மீட்ட மேலப்பாளையம் தனிப்படை போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மாதேஷை கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். திருநெல்வேலி நகரம் பகுதி கண்ணன் சாலையில் உள்ள இருசக்கர வா... மேலும் பார்க்க

பேட்டையில் குடும்பத் தகராறில் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு

பேட்டை அருகே குடும்பத் தகராறில் கணவரால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பேட்டை காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் பாஸ்கா் (35). இவரது மனைவி இசக்கியம்ம... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சிவந்திபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா். சிவந்திபுரத்தை சோ்ந்தவா் டேனியல் தேவதாஸ் (43). ஓட்டுநரான இவா், தனது மனைவி ஆறுமுகச்செ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவிக்குச் செல்லத் தடை

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து மேற... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திர... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டில் 11,039 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது: ஆட்சியா்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டில் 11,039 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். உலக குருதி கொடையாளா் தினத்தை முன்னிட்டு, ரத்த தானம் செய்தவ... மேலும் பார்க்க