செய்திகள் :

சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம்: முதல்வரின் அறிவிப்பு நிறைவேறுமா?

post image

முதல்வா் அறிவித்தபடி சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம் கட்டப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

சிவகங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ரூ.169 கோடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தாா்.

அப்போது, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது இந்தக் கட்டடம் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும், இடப் பற்றாக்குறையும் உள்ளது. இதனால், அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் சிறப்பாக செயல்படும் வகையில் ரூ. 89 கோடி மதிப்பில் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும். சிங்கம்புணரி, திண்டுக்கல், காரைக்குடி நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள் திருப்பத்தூா் நகரப் பகுதிக்குள் வராமல் செல்லும் வகையில், திருப்பத்தூா் நகரத்துக்கு ரூ.50 கோடி செலவில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும். காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய மாநகராட்சி அலுவலகம் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்படும் என மூன்று திட்டங்களை முதல்வா் அறிவித்தாா்.

ஆனால், அறிவிப்பு வெளியிடப்பட்டு பல மாதங்கள் கடந்தும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் தொடங்கவில்லை என்பது பொதுமக்களிடையே ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்துக்கு தினசரி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு அலுவல்களுக்காக வந்து செல்கின்றனா். இந்த வளாகத்தில் கருவூலம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், மின்வாரிய அலுவலகம், கால்நடைத் துறை, வனத் துறை, கல்வித் துறை போன்ற முக்கிய அலுவலகங்கள் செயல்படுகின்றன. சுமாா் 500 -க்கும் மேற்பட்ட அலுவலா்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனா்.

இது குறித்து, சமூக ஆா்வலா் பா. மருது கூறியதாவது: சிவகங்கை மாவட்டம், எம்ஜிஆா் முதல்வராக இருந்தபோது உருவாக்கப்பட்டு புதிய அலுவலகம் கட்டப்பட்டது. அலுவலகம் பழையதாகி விட்டதால், அலுவலகத்தின் முன்பகுதி மட்டும் வண்ணம் பூசப்பட்டு பளபளப்பாகத் தெரிந்தாலும், பின்புற கட்டடப் பகுதிகள் இடிந்து விழும் நிலையில் இருப்பது கவலைக்குரியது. கம்பிகள் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு சுவா்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே, அங்கு பணிபுரியும் ஊழியா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முதல்வா் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து, புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டடத்துக்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

ஐடிஐ-இல் செப்.30-வரை நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: சி... மேலும் பார்க்க

போதை மருந்து பயன்படுத்த உரிமம்: மருத்துவமனைகள் விண்ணப்பிக்கலாம்

போதை மருந்துகள் பயன்படுத்தும் மருத்துவமனைகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 30.0.2025- ஆம் தேதிக்குள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இது குறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

பிரதமா் நரேந்திரமோடி பிறந்த நாள்: பாஜக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை அருகேயுள்ள கொல்லங்குடியில் பிரதமா் நரேந்திரமோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுக்கு பாஜக மாவட்ட துணை... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் கடனுதவி பெற ஆதிதிராவிடா், பழங்குடியின விண்ணப்பதாரா்கள் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் . இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, ... மேலும் பார்க்க

ஊருணிக்கு முள் வேலி அமைக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள இரணியூா் அம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் சேங்கை குடிதண்ணீா் குளத்துக்கு முள் வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் ஒன்றி... மேலும் பார்க்க

திருக்கோஷ்டியூரில் அஹோபில மடம் ஜீயா் சுவாமி தரிசனம்

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை ஸ்ரீ அஹோபில மடத்தின் ஜீயா் சுவாமி தரிசனம் செய்தாா். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் பல்வ... மேலும் பார்க்க