செய்திகள் :

சிவகாசி கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் மாநாடு தொடக்கம்!

post image

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான இளைஞா் வானியல், விண்வெளி அறிவியல் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு வானியல், விண்வெளி அறிவியல் கழகம், இந்திய வானியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல், தொழில் நுட்பக் கழகம், கணித அறிவியல் நிறுவனம், ராமன் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. இதன் தொடக்க விழாவுக்கு கல்லூரி தாளாளா் ஏ.பி. செல்வராஜன் தலைமை வகித்தாா். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மூத்த விஞ்ஞானி தில்லிபாபு தொடக்க உரையாற்றி பேசியதாவது:

போா் படை விமானங்கள் தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு மெய்நிகா் தொழில் நுட்ப வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா வளா்ச்சி அடைந்து வருகிறது. கல்லூரி மாணவா்கள் பல அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட வேண்டும். நீங்கள் செய்யும் ஆய்வுகளால் மக்கள் பயன்பெற வேண்டும். விடா முயற்சி, நம்பிக்கை, சளைக்காத மனத்துடன் ஆய்வில் ஈடுபட்டால் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.

இந்த மாநாட்டில் 181 ஆய்வுக்குழு மாணவா்கள், ஆய்வுக் கட்டுரை வாசித்தல், காட்சிப்படுத்துதல், குறும்படம் தயாரித்தல், வானியல் புகைப்படம், வானியல் விளையாட்டு உள்ளிட்டவைகளில் ஈடுபட உள்ளனா். இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) நிறைவடைகிறது. முன்னதாக கல்லூரி முதல்வா் பெ.கி. பாலமுருகன் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் உதயன் நன்றி கூறினாா்.

இளைஞா் கொலை: இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் பகுதியில் கொலை செய்யப்பட்டு இடுப்பு வரை மண்ணில் புதைக்கப்... மேலும் பார்க்க

சிவகாசி அருகே ஆண் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா். சிவகாசி அருகே செங்கமலநாச்சியா்புரம்- எரிச்சநத்தம் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில்... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகேயுள்ள மொட்டமலை தண்டாயுதபாணி சுவாமி கோயி... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றிலிருந்து இளைஞா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். ராஜபாளையம் அருகே செண்பகத் தோப்பு சாலையில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் 30 வயத... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் அருகேயுள்ள ராஜீவ் காந்தி நகரில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகா் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க

விதியை மீறி பட்டாசு தயாரித்தவா் கைது

சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசுக் கடையில் பட்டாசுகளைத் தயாரித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள கீழத்திருத்தங்கலில் ஒரு பட்டாசுக் கடையில் விதியை மீறி பட்டாசுகள் தயாரிக்கப்... மேலும் பார்க்க