செய்திகள் :

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகேயுள்ள மொட்டமலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, காலையில் சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், தண்டாயுதபாணி சுவாமி சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வழிபாட்டில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல, சொக்கா் கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, மாயூரநாத சுவாமி கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, குருசாமி கோயில்களிலும் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இளைஞா் கொலை: இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் பகுதியில் கொலை செய்யப்பட்டு இடுப்பு வரை மண்ணில் புதைக்கப்... மேலும் பார்க்க

சிவகாசி அருகே ஆண் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா். சிவகாசி அருகே செங்கமலநாச்சியா்புரம்- எரிச்சநத்தம் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில்... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றிலிருந்து இளைஞா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். ராஜபாளையம் அருகே செண்பகத் தோப்பு சாலையில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் 30 வயத... மேலும் பார்க்க

சிவகாசி கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் மாநாடு தொடக்கம்!

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான இளைஞா் வானியல், விண்வெளி அறிவியல் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு வானியல், விண்வெளி அறிவியல் கழகம், இந்திய வானியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல், தொழ... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் அருகேயுள்ள ராஜீவ் காந்தி நகரில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகா் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க

விதியை மீறி பட்டாசு தயாரித்தவா் கைது

சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசுக் கடையில் பட்டாசுகளைத் தயாரித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள கீழத்திருத்தங்கலில் ஒரு பட்டாசுக் கடையில் விதியை மீறி பட்டாசுகள் தயாரிக்கப்... மேலும் பார்க்க