செய்திகள் :

பாகிஸ்தானின் அதிபராகப் பதவியேற்கிறாரா ராணுவ தலைமைத் தளபதி?

post image

பாகிஸ்தானின் பாதுகாவலனாக இறைவன் என்னை மாற்றியிருக்கிறார் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பும்போது பெல்ஜியத்தில் பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆசிம் முனீர், “நான் ஒரு ராணுவ வீரன், வீர மரணமடைவதே எமது பெரும் விருப்பம். அதைத்தவிர வேறெந்த பதவியும் எனக்கு தேவையில்லை” என்றார்.

பாகிஸ்தானின் அதிபரையும் பிரதமரையும் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பரவலாக வதந்தி பரவி வரும் நிலையில், ஆசிம் முனீரின் இந்த கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மேற்கண்ட வதந்திகள் அனைத்து முற்றிலும் தவறானவை என்று ஆசிம் முனீர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தலிபான்களை பாகிஸ்தானுக்குள் ஊடுருவச் செய்யும் ஆப்கானிஸ்தானின் நடவடிக்கைகளுக்கும், இந்தியாவின் சில நடவடிக்கைகளுக்கும் அவர் இரு நாடுகளையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

“ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் கருணையுடன் சாதகமான நடவடிக்கைகள் பலவற்றை கடந்த ஆண்டுகளில் செய்திருந்தபோதிலும், அதற்கு பிரதிபலனாக இந்தியாவுடன் கைகோத்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சதித்திட்டம் தீட்டுவதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.

”பாகிஸ்தானில் உள்ள கனிம வளங்களை நல்ல முறையில் பயன்படுத்துவதன் மூலம் உலகின் வளமான சமூகங்களில் ஒன்றாக பாகிஸ்தானை மாற்றுவோம் என்றும், பாகிஸ்தானின் கடன் சுமையும் இதனால் குறையும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, “அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுடனும் பாகிஸ்தானின் நட்புறவு தொடரும் என்றும், இவர்களில் ஒருவரைப் பகைத்துக்கொண்டு இன்னொருவரை விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Pak Army Chief Asim Munir on his political ambitions

கனடா: விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தால் 600 விமானங்கள் ரத்து

கனடாவில் பெரிய விமான நிறுவனமான ஏர் கனடாவில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதால், விமான சேவை பாதிக்கப்பட்டது. ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமானிகள், வ... மேலும் பார்க்க

வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமா் இரங்கல்

ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீா் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் அண்மையில் மழை-வெள்ள பாதிப்பால் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு ஜப்பான் பிரதமா் இஷிபா ஷிகேரு இரங்கல் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

ரஷிய தொழிற்சாலையில் தீ: 11 போ் உயிரிழப்பு

ரஷியாவின் ரியாசன் பகுதியிலுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 130 போ் காயமடைந்தனா். தலைநகா் மாஸ்கோவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலையில் உள்ள வெடிமருந்து பட்டறையி... மேலும் பார்க்க

காஸா மக்களை குடியமா்த்த தெற்கு சூடானுடன் இஸ்ரேல் ஆலோசனை

போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதி மக்களை வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் மறுகுடியமா்த்துவது தொடா்பாக அந்த நாட்டுடன் இஸ்ரேல் அரசு பேச்சுவாா்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு சீன நீா்முழ்கி

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியது.பாகிஸ்தான் கடற்படை வலிமையை மேம்படுத்த எட்டு ஹங்கோா் வகை நீா்முழ்கிக் கப்பல்களை வழங்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத... மேலும் பார்க்க

மியான்மா் ராணுவ விமானத் தாக்குதலில் 21 போ் உயிரிழப்பு

மியான்மரின் மொகோக் நகரிலுள்ள ரத்தினக் கல் சுரங்க மையத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 16 பெண்கள் உட்பட 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து கிளா்ச்சி ஆயுதக் குழுவினா், உள்ளூா் மக்கள... மேலும் பார்க்க