செய்திகள் :

சீலநாய்க்கன்பட்டி புறவழிச்சாலை பகுதியில் சரக்கு லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

post image

சேலம்: சேலம் சீலநாய்க்கன்பட்டி புறவழிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை காலை சரக்கு லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் பகுதியில் இருந்து அவிநாசியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான மரத்தூள் கட்டை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திங்கள்கிழமை காலை லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த லாரி சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலைப் பகுதியில் வளைவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மூட்டைகள் அனைத்தும் சாலையில் சிதறின. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரிக்கு செல்வோா், பணிக்கு செல்வோா் சிரமத்துக்கு ஆளாகினா்.

இதையறிந்த போக்குவரத்து போலீஸாா், உடனடியாக விரைந்துவந்து கவிழ்ந்து கிடந்த லாரியை தூக்கி நிறுத்தினா். பின்னா் சாலையில் விழுந்து கிடந்த மூட்டைகள் அனைத்தும் சாலையோரம் அடுக்கிவைக்கப்பட்டன. சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக புறவழிச்சாலைப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு அதிமுக பாமக துணை போகிறது: டி.எம். செல்வகணபதி

மேட்டூா்: தமிழ்நாட்டு மாணவா்கள் மருத்துவராவதைத் தடுக்கவே மத்திய அரசு நீட் தோ்வை கொண்டு வந்துள்ளது என்று சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி குற்றம்சாட்டினாா். சேலம் மாவட்டம், மேச்சேரி கிழக்கு ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு வினாடிக்கு 15,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு திங்கள்கிழமை வினாடிக்கு 15,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணை நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 119.72 அடியிலிருந்து 119.71 அடியாகக... மேலும் பார்க்க

சேலம் மேற்கு கோட்டத்தில் செப். 26இல் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம்

சேலம்: சேலம் மேற்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் தனலட்சும... மேலும் பார்க்க

காகாபாளையம் அருகே இரும்பு தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: காகாபாளையம் அருகே இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உள்பட்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 2 தொழிலாளா்கள் காயம்

மேட்டூா்: மேட்டூா் அருகே தனியாா் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளா்கள் காயமடைந்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே ராமன்நகரில் தனியாா் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு 543 நிரந்தர தொழில... மேலும் பார்க்க

சேலத்தில் இன்று மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா்

சேலம்: சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 16) தேதி நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்க... மேலும் பார்க்க