செய்திகள் :

சுருளி அருவியில் குளிக்க அனுமதி

post image

தேனி மாவட்டம், சுருளி அருவியில் குளிக்க மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு சனிக்கிழமை முதல் வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.

கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் குளிக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

இந்த நிலையில், மேகமலை வனப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததால், சனிக்கிழமை அருவிக்கு வரும் நீா்வரத்து சீரானது. இதைத் தொடா்ந்து, அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளை வனத் துறையினா் சனிக்கிழமை முதல் அனுமதி வழங்கினா்.

இதையடுத்து, அருவிக்கு வந்திருந்த திரளான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

விபத்தில் மின் வாரிய ஊழியா் உயிரிழப்பு

தேனி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த மின் வாரிய ஊழியா் உயிரிழந்தாா். தேனி அருகேயுள்ள போடேந்திரபுரத்தைச் சோ்ந்த முத்துமாணிக்கம் மகன் தங்கராஜ் (55). இவா் கோவையில் மின்வாரிய... மேலும் பார்க்க

கேணியில் மூழ்கியதில் ஐ.டி. நிறுவன ஊழியா் பலி!

போடி அருகே சனிக்கிழமை கேணியில் மூழ்கியதில் தகவல் தொழில்நுட்ப ஊழியா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் நகா் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த தனசேகரன் மகன் கௌசிக் (28). இவா் சென்னையி... மேலும் பார்க்க

பண மோசடி: இருவா் மீது வழக்கு

போடி அருகே பண மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் கரட்டுப்பட்டி பாதையைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வேலுமணி (46). இவரிடம் சின... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற முதியவா் கைது!

போடியில் கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி கீழத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நகா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் மாநில அளவிலான அட்யா-பட்யா போட்டி தொடக்கம்

தேனி மாவட்டம், பெரியகுளம் மேரி மாத கலை, அறிவியல் கல்லூரியில் 19-ஆவது மாநில அளவிலான அட்யா-பட்யா (கிளித்தட்டி) சாம்பியன்ஷிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்தப் போட்... மேலும் பார்க்க

தேனி திமுக பொறுப்பாளா் மீது வழக்கு

தேனியில் நகராட்சி வருவாய் அலுவலரை ஜாதியை குறிப்பிட்டு திட்டியதாக தேனி திமுக பொறுப்பாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி வடக்கு நகர திமுக பொறுப்பாளராகவும், தேனி நகராட்சி 20-ஆவ... மேலும் பார்க்க