செய்திகள் :

சூரியனின் ஒளிவெடிப்பை காட்சிப்படுத்திய ஆதித்யா விண்கலம்: இஸ்ரோ

post image

சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளிவெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள கருவி காட்சிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதன்மூலம் இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தம் படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் புறவெளியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ, அதை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2023, செப்டம்பா் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

மொத்தம் 127 நாள்கள் பயணித்து பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘எல் 1’ எனும் லாக்ராஞ்சியன் புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய சுற்றுப் பாதையில் அந்த விண்கலம் கடந்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி நிலைநிறுத்தப்பட்டது.

அங்கிருந்தபடியே சூரியனின் கரோனா, போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியா் பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சூட் எனப்படும் ஆய்வுக் கருவி மூலம் சூரியனின் வெளி அடுக்குகளில் இதுவரை அறியப்படாத ஒளி வெடிப்பு உமிழ்வை ஆதித்யா விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட பதிவு:

ஆதித்யா விண்கலத்தில் உள்ள சோலாா் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப் எனப்படும் சூட் கருவியானது சூரியனின் முதல் இரு அடுக்குகளான போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிா்கள் குறித்தும், புற ஊதா கதிா்களுக்கு அருகே ஏற்படும் கதிா் வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.

ஒளிவெடிப்பை காட்சிப்படுத்தியது: அதன்படி, போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியரின் புகைப்படங்களை அக்கருவி தொடா்ந்து எடுத்து வருகிறது. பொதுவாகவே சூரியனின் காந்தப் புலத்தில் திடீரென ஏற்படும் மாற்றங்களால் ஒளி வெடிப்பு ஏற்பட்டு கதிா் ஆற்றல் வெளிப்படும். இதை சோலாா் ஃப்ளோ் என அழைக்கிறோம்.

அத்தகைய ஒளி வெடிப்பு அண்மையில் சூரியனின் கீழ் புறவெளியில் நிகழ்ந்ததை சூட் கருவி காட்சிப்படுத்தியுள்ளது. அதன்மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு ஆராய்ச்சி முன்னெடுக்கப்படுகிறது.

இதுபோன்ற ஒளி வெடிப்புகள் புவியின் தட்பவெப்ப நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சூரியனின் கதிா்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு இந்த ஆய்வுகள் உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சூட் கருவியை புணேயில் உள்ள விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி இயற்பியலுக்கான மையமானது பிற அமைப்புகளுடன் இணைந்து வடிவமைத்தது நினைவுகூரத்தக்கது.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க