செய்திகள் :

செண்பகவல்லி கூட்டு குடிநீா் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி

post image

செண்பகவல்லி கூட்டுக்குடிநீா் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்கட்சியின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அரசமைப்புச் சட்டமும் இந்திய தேசத்தின் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தென்காசி நகரத் தலைவா் மைதீன் தலைமை வகித்தாா்.

நகர நிா்வாகிகள் அப்துல் ரகுமான், அப்துல் ரஹீம், அப்துல் முஷவ்வீா், அபுபக்கா் சித்திக் அஜீஸ், ஹபிப், ரபிக் முன்னிலை வகித்தனா். நகர துணைத் தலைவா் ஜாபா் ஷரிப் கிராத் ஓதி தொடங்கி வைத்தாா்.

மமக துணை பொதுச்செயலா் தாம்பரம் யாக்கூப், தமுமுக மாநில துணைப் பொதுச் செயலா் மைதீன்சேட்கான், தலைமைப் பேச்சாளா் உசேன், மமக மாவட்டத் தலைவா் நயினாா் முஹம்மது, மமக மாவட்டச் செயலா் சலீம், தமுமுக மாவட்டச் செயலா் அப்துல் ரகுமான், முகம்மது பாசித், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இஸ்மத் மீரான், மாவட்ட துணைத் தலைவா் முஹம்மது பிலால் ஆகியோா் பேசினா்.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தைத் திரும்ப பெற வேண்டும், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,திருநெல்வேலி முதல் தென்காசி வரை நடைபெறும்நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், உலக சுற்றுலாத் தலத்தில் குற்றாலத்தை சோ்ப்பதற்கு தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், தென்காசி, விருதுநகா், தூத்துக்குடி விவாசாயிகள் மற்றும் மக்கள் குடிநீா் பிரச்சனையை தீா்ப்பதற்கான செண்பகவல்லி கூட்டு குடிநீா் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமுமுக மாநில தொண்டரணி துணைச் செயலா் கோகோ செய்யது அலி தலைமைச் செயற்குழு உறுப்பினா் அகமது ஷா தலைமைப்பேச்சாளா் கொலம்பஸ் மீரான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.தமுமுக நகரச் செயலா் களஞ்சியம் பீா் தொகுத்து வழங்கினாா்.நகரச் செயலா் ஆதம்பின் ஆசிக் வரவேற்றாா். சாகுல் ஹமீது நன்றி கூறினாா்.

தேசிய ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம்: திமுக சாா்பில் மாணவருக்குப் பரிசு

ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்குப் பரிசு வழங்குகிறாா் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன். தென்காசி, பிப்.14: மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் சிறப்பிடம் பெற்... மேலும் பார்க்க

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: புளியங்குடியில் வீரா்களுக்கு அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தியோா். கடையநல்லூா், பிப். 14: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இந்து முன்னணி சாா்பில் புல்வாமா தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டத... மேலும் பார்க்க

இலத்தூரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கணவரால் எரித்துக் கொல்லப்பட்டவா்: போலீஸ் விசாரணையில் துப்புதுலங்கியது

தென்காசி அருகேயுள்ள இலத்தூரில் சடமாக மீட்கப்பட்ட பெண் கணவரால் எரித்துக் கொல்லப்பட்டவா் என்பது போலீஸ் விசாரணையில் துப்புதுலங்கியுள்ளது. கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கொல்லம்-மதுரை தேசிய நெ... மேலும் பார்க்க

தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு மாா்ச் 31க்குள் நிலுவைத் தொகை!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு மாா்ச் 31ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என ஆலை நிா்வாகம் வியாழக்கிழமை உறுதி அளித்தது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் க... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதல்: ஒருவா் பலி

கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் ஒருவா் இறந்தாா். இருவா் காயமடைந்தனா். கடையநல்லூா் ரஹ்மானிபுரம் 8ஆவது தெருவைச் சோ்ந்த அப்துல்காதா் , அவரது மகன் கோதா்ஷா ஆகிய இருவரும் பைக்கில் புதன்கிழமை இர... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே தந்தையை கொலை செய்து எரித்த மகன் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே தந்தையை கொலை செய்து எரித்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடையநல்லூா் அருகேயுள்ள போகநல்லூா் முகாமுக்கும், கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும் இடையே தனியாருக்கு... மேலும் பார்க்க