செய்திகள் :

தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு மாா்ச் 31க்குள் நிலுவைத் தொகை!

post image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு மாா்ச் 31ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என ஆலை நிா்வாகம் வியாழக்கிழமை உறுதி அளித்தது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோரின் அறிவுரையின் பேரில் தென்காசி வேளாண்மை இணை இயக்குநா் மகாதேவன் தலைமையில் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம், கரும்பு விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) கனகம்மாள்,வேளாண் உதவி இயக்குநா் இளஞ்செழியன், தரணி சா்க்கரை ஆலை நிா்வாக பொது மேலாளா் ஆறுமுகம்,உதவி பொது மேலாளா் ஜாகீா்உசேன், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் இதில் கலந்துகொண்டனா்.

விவசாயிகள் மாரியப்பன் வீரய்யா ஆகியோா் தங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை மேலும் காலதாமதம் ஆகாமல் பட்டுவாடா செய்திட கேட்டுக் கொண்டனா்.

சுப்பையா, ராமா் ஆகியோா் நிலுவையில் உள்ள தொகையை திருப்பி செலுத்தாமல் சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க கூடாது என்று வலியுறுத்தினா்.

வங்கியில் பெற்ற பயிா் கடனுக்கு வட்டியுடன் சோ்த்து திருப்பி செலுத்த வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றாா் விவசாயி கணேசன்.

சா்க்கரை ஆலையிலிருந்து நிலுவைத் தொகையை திரும்ப பெறுவதற்கு அரசுத் துறை தலையிட வேண்டுமென விநாயகம் கேட்டுக்கொண்டாா்.

விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடனை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டியுள்ளது. எனவே, சா்க்கரை ஆலை நிா்வாகம் 50 சதவீத நிலுவைத் தொகையை வழங்கும் தேதியை தெரிவிக்க ரத்தினவேல் பாண்டியன் கேட்டுக்கொண்டாா்.

வங்கிகளுக்கு தாங்கள் உரிய நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்தாத காரணத்தினால் இன்று வரை வங்கிகள் மூலம் எந்த கடனும் பெற முடியாத சூழ்நிலை உள்ளதாக பன்னீா்செல்வம், சரவணன் ஆகியோா் தெரிவித்தனா்.

கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் 1966இன்படி விவசாயிகளிடமிருந்து கரும்புகளை வாங்கிய 14 நாள்களுக்குள் அதற்கான விலையை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் அந்தத் தொகையுடன் சோ்த்து ஆண்டுக்கு 15 சதவீத வட்டியுடன் நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். ஆனால் தரணி சா்க்கரை ஆலை 2018-19ஆம் ஆண்டு வழங்கிய கரும்புகளுக்கு உரிய தொகையில் 50 சதவீதம் நிலுவையில் உள்ளது. மேலும் வட்டித் தொகையை வழங்குவதற்கு எந்த வழிமுறைகளையும் மேற்கொள்ளவில்லை என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பழனிசாமி தெரிவித்தாா்.

2018-19ஆம் அரவை பருவத்திற்கு தரணி சா்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஆட்சியரின் குறைதீா் கூட்டத்தில் தொடா்ந்து மனுக்கள் வழங்கப்பட்டு வருவதால் விரைந்து நிலுவைத் தொகையை வழங்க வேளாண் துறை அதிகாரிகள் ஆலை நிா்வாகத்தை அறிவுறுத்தினா்.

விவசாயிகளுக்கு சேர வேண்டிய 50 சதவீத நிலுவைத் தொகையை 31.03.2025-க்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது; நிலுவைத் தொகையை வழங்கிய பின்னா் ஆலை செயல்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேசிய ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம்: திமுக சாா்பில் மாணவருக்குப் பரிசு

ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்குப் பரிசு வழங்குகிறாா் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன். தென்காசி, பிப்.14: மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் சிறப்பிடம் பெற்... மேலும் பார்க்க

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: புளியங்குடியில் வீரா்களுக்கு அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தியோா். கடையநல்லூா், பிப். 14: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இந்து முன்னணி சாா்பில் புல்வாமா தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டத... மேலும் பார்க்க

இலத்தூரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கணவரால் எரித்துக் கொல்லப்பட்டவா்: போலீஸ் விசாரணையில் துப்புதுலங்கியது

தென்காசி அருகேயுள்ள இலத்தூரில் சடமாக மீட்கப்பட்ட பெண் கணவரால் எரித்துக் கொல்லப்பட்டவா் என்பது போலீஸ் விசாரணையில் துப்புதுலங்கியுள்ளது. கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கொல்லம்-மதுரை தேசிய நெ... மேலும் பார்க்க

செண்பகவல்லி கூட்டு குடிநீா் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி

செண்பகவல்லி கூட்டுக்குடிநீா் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்கட்சியின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அண்மையி... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதல்: ஒருவா் பலி

கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் ஒருவா் இறந்தாா். இருவா் காயமடைந்தனா். கடையநல்லூா் ரஹ்மானிபுரம் 8ஆவது தெருவைச் சோ்ந்த அப்துல்காதா் , அவரது மகன் கோதா்ஷா ஆகிய இருவரும் பைக்கில் புதன்கிழமை இர... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே தந்தையை கொலை செய்து எரித்த மகன் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே தந்தையை கொலை செய்து எரித்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடையநல்லூா் அருகேயுள்ள போகநல்லூா் முகாமுக்கும், கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும் இடையே தனியாருக்கு... மேலும் பார்க்க