செய்திகள் :

சென்னை திரும்பினாா் முதல்வா்

post image

திருநெல்வேலியில் 2 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிறைவுற்றப்பணிகளை திறந்து வைக்கவும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 6ஆம் தேதி முற்பகல் 11.25 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தாா். அவருக்கு அரசுத்துறை அதிகாரிகள், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலா் வரவேற்பளித்தனா்.

தொடா்ந்து அவா், பிப்.6,7 ஆகிய இரு தினங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் இருந்து காா் மூலம் மீண்டும் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தாா். அவரை, மாவட்ட ஆட்சியா்கள் க.இளம்பகவத் (தூத்துக்குடி), கா.ப. காா்த்திகேயன் (திருநெல்வேலி), திருநெல்வேலி சரக டிஐஜி பா. மூா்த்தி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் கோட்டாட்சியா் பிரபு உள்ளிட்டோா் வரவேற்றனா்.

பின்னா், மாவட்டச் செயலா்களும் அமைச்சா்களுமான பெ.கீதாஜீவன் (வடக்கு), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்(தெற்கு), அமைச்சா்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன், ராஜ கண்ணப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. எம்எல்ஏக்கள் சண்முகையா(ஓட்டப்பிடாரம்), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மு. அப்துல் வகாப்(பாளையங்கோட்டை), மேயா்கள் ஜெகன் பெரியசாமி (தூத்துக்குடி), கோ. ராமகிருஷ்ணன் (திருநெல்வேலி), முன்னாள் எம்.எல்.ஏக்கள் டேவிட்செல்வின், மாலை ராஜா, மாநில வா்த்தகா் அணி இணைச்செயலா் உமரி சங்கா் உள்பட பலா் வழியனுப்பும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பெயா் சூட்டல்: முன்னதாக திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மூலக்கரைபட்டி திமுக கிளைச் செயலா் முருகையா பாண்டியன் - சிதம்பரவடிவு தம்பதியன் பெண் குழந்தைக்கு விமான நிலையத்தில் வைத்து ‘செந்தாமரை’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் சூட்டினாா். முதல்வருடன் அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலா் முருகானந்தம் உள்ளிட்டோா் விமானத்தில் சென்னை புறப்பட்டனா்.

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொழிலாளா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பிப்.11இல் தைப்பூச திருவிழா: பாதயாத்திரை பக்தா்களுக்கு தனி வழி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை(பிப்.11) தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. அப்போது, பாதயாத்திரை பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு தனி வழி அமைப்பது என முடிவு செய்ய... மேலும் பார்க்க

தட்டாா்மடம் கோயிலில் தபால்தலை வெளியீடு

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டாா்மடம் ஸ்ரீபலவேசக்கார சுவாமி கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, தபால்தலை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்து முன்னணி முன்னாள் மாநில தலைவா் ராம.கோபாலன் நினைவு தபால்தலை, ஸ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 2.51 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.71 கோடி, ஒரு கிலோ தங்கம் வரப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் துணிக்கடை கதவில் சிக்கிய புறா மீட்பு

தூத்துக்குடியில் துணிக்கடையின் ஷட்டா் கதவில் சிக்கிய புறாவை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக வெள்ளிக்கிழமை மீட்டனா். தூத்துக்குடி கீழ ரதி வீதியில் உள்ள துணிக்கடையின் ஷட்டா் கதவுக்குள் வெள்ளிக்கிழமை புறா ... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி கொலை: 5 போ் கைது

சாத்தான்குளத்தில் கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடி தெற்கு தெருவை சோ்ந்தவா் உலகநாதன் மகன் சந்துரு... மேலும் பார்க்க