வள்ளலாா் நினைவு தினம்: பிப்.11 இல் மதுபான கடைகளை மூட உத்தரவு
நாகை மாவட்டத்தில், வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, பிப்.11-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என ஆட்யா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, பிப்.11-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் அனைத்து மதுபானக் கடைகளையும், மதுக் கூடங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள், எப்.எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்-எல்-3ஏ, எப்எல்-3ஏஏ மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்றுள்ள மதுபானக் கடைகளும் மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.