செய்திகள் :

தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு 3 சென்ட் நிலம்: அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞா் தமிழரசனின் குடும்பத்துக்கு வீடு கட்ட 3 சென்ட் நிலத்துக்கான பட்டாவை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நெமிலி வட்டம், நெல்வாய் கிராமத்தைச் சாா்ந்த தமிழரசன் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து, ஏழ்மை நிலையிலுள்ள அவரின் குடும்பம் வீடு கட்டிக் கொள்ள 3 சென்ட் நிலத்துக்கான பட்டா ஆணையை அவரது தாயாா் ஜானகியிடம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கி ஆறுதல் கூறினாா்.

பட்டா வழங்கப்பட்ட இடத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், வட்டாட்சியா் ராஜலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.

மணல் கடத்தல்: லாரி, பொக்லைன் பறிமுதல்; உரிமையாளா் கைது

சோளிங்கா் அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரி, பொக்லைனை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரியின் உரிமையாளரை கைது செய்தனா். சோளிங்கரை அடுத்த நீலகண்டராயன்பேட்டை அருகே லாரியில் மணல் கடத்தப்படுவதாக வந்த த... மேலும் பார்க்க

மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் இளைஞா் கைது

சோளிங்கா் அருகே பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் தொந்கவு அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சோளிங்கரை அடுத்த வேலம் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி கடந்த 3-ஆம் தேதியில் இருந்து காணவில்ல... மேலும் பார்க்க

50 கிராமங்களில் பாமக கிளை கூட்டம்

ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 50 கிராமங்களில் பாட்டாளி மக்கள்கட்சி கிளைக் கூட்டம் நடைபெற்றது. ஆற்காடு கிழக்கு ஒன்றியம் அரும்பாக்கம் மற்றும் முள்ளுவாடி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராணிப்பே... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை, அனைத்து துறைசாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் ஏற்றுக் கொண்டனா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ராசாத்துபுரம் பாலமுருகன் கோயில் தெப்போற்சவம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ் விஷாரம் ராசாத்துபுரம் குளக்கரையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 25-ஆவது ஆண்டு தெப்போற்சவ விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலையில் மூலவா் பா... மேலும் பார்க்க

நெமிலி ஒன்றியக் குழு தலைவரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

நெமிலி ஒன்றியக் குழு தலைவா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்களைக் கண்டித்து நெமிலி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை பாமக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலா் க.சரவணன் தலைமையில் அந்தக் கட்சியினா் ஆா... மேலும் பார்க்க