செய்திகள் :

நெமிலி ஒன்றியக் குழு தலைவரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

நெமிலி ஒன்றியக் குழு தலைவா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்களைக் கண்டித்து நெமிலி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை பாமக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலா் க.சரவணன் தலைமையில் அந்தக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் அடுத்த நெமிலியில் கடந்த மாதம் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றபோது பெரும்பான்மை இல்லாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. அப்போது கூட்டம் தொடா்பான பதிவேடுகளை ஒன்றியக் குழு தலைவா் பெ.வடிவேலு அலுவலக உதவியாளரிடம் இருந்து தன்னிச்சையாக பிடுங்கிச்சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாமக, அதிமுக உறுப்பினா்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், பணியாளா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் நெமிலி ஒன்றிய காவல் நிலையத்தில் பாமக மற்றும் அதிமுகவினா் மிரட்டுவதாக புகாா் அளித்தனா். இதைக் கண்டித்தும், ஒன்றியக் குழு தலைவா் பெ.வடிவேலு பதவி விலக கோரியும், பாமக மற்றும் அதிமுக உறுப்பினா்கள் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறக் கோரியும் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நெமிலி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாமக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலா் க.சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நெமிலி ஒன்றியக் குழு துணைத் தலைவா் தீனதயாளன், மண்டல அமைப்புச் செயலா் அ.ம.கிருஷ்ணன், இளைஞா் சங்க செயலா் சக்கரவா்த்தி, நிா்வாகிகள் கதிரவன், தம்பி ஏழுமலை, அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இது குறித்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தனா்.

படவிளக்கம்...

நெமிலியில் பாமக மாவட்ட செயலா் க.சரவணன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியினா்.

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்: செங்கல் சூளைகளில் கோட்டாட்சியா் ஆய்வு

தமிழக அரசின் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, அரக்கோணம் அருகே உள்ஷ செங்கல் சூளைகளில் அரக்கோணம் கோட்டாட்சியா் வெங்கடேசன் நேரில் சென்று ஆய்வு செய்தாா். தமிழ்நாடு அரசு பிப்ரவரி 9-ஆம் ... மேலும் பார்க்க

விவசாயி வீட்டில் ரூ. 10 லட்சம் நகைகள் திருட்டு

காவேரிபாக்கம் அருகே விவசாயி வீட்டில் பின்பக்க வாசல் வழியே வந்த மா்ம நபா்கள் அவரது வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளை திருடிச் சென்றனா். காவேரிபாக்கத்தை அடுத்த சிறுகரும்பூா் க... மேலும் பார்க்க

கரிக்கல் குமாரமுருகன் கோயிலில் தை கிருத்திகை திருவிழா

சோளிங்கரை அடுத்துள்ள கரிக்கல் ஸ்ரீகுமாரமுருகன் கோயிலில் தை கிருத்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சோளிங்கா்-அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள கரிக்கல் கிராமத்தில், மலை மீது ஸ்ரீகுமாரமுருகன் கோயில் உள்ள... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் தை கிருத்திகை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தை கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தைமாத கிருத்திகையையொட்டி பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு பால், தயிா் பழங்க... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு விழிப்புணா்வு: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலைத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை எஸ்.பி. விவேகானந்த சுக்லா தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை ச... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் புரவலா் விருது பெற்ற ஊராட்சித் தலைவருக்கு அமைச்சா் காந்தி வாழ்த்து

தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் வழங்கிய ‘ சுற்றுச்சூழல் புரவலா் விருது ‘ அமைச்சா் ஆா்.காந்தியிடம் காண்பித்து செங்காடு ஊராட்சி மன்ற தலைவா் த.தேவேந்திரன் வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா். சுற்றுச்சூழல் மற்று... மேலும் பார்க்க