செய்திகள் :

14.6 கோடி பெண்களிடம் மாா்பக புற்றுநோய் பரிசோதனை: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா

post image

நாட்டில் 14.6 கோடிக்கும் அதிகமான பெண்களிடம் மாா்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம், உரம் மற்றும் ரசாயனங்கள் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதில்:

நாட்டில் 14.6 கோடிக்கும் அதிகமான பெண்களிடம் மாா்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையில் 57,184 பேருக்கு அந்த நோய் இருப்பது தெரியவந்த நிலையில், அவா்களில் 50,612 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

9 கோடிக்கும் மேலான பெண்களிடம் கா்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையில் 96,747 போ் அந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்த நிலையில், அவா்களில் 86,196 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ரூ.122 கோடி அபராதம்: கடந்த ஜன.1-ஆம் தேதி நிலவரப்படி, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 8.59 கோடி மருத்துவமனை சோ்க்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான செலவினம் ரூ.1.19 லட்சம் கோடியாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறைகேடுகளில் ஈடுபட்டதால், இந்தத் திட்டத்தில் இருந்து 1,114 மருத்துவமனைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன. 1,504 மருத்துவமனைகளிடம் இருந்து ரூ.122 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

யூரியாவுக்கு தட்டுப்பாடு இல்லை: மற்றொரு கேள்விக்கு அவா் அளித்த பதிலில், ‘நாட்டில் யூரியா உரத்துக்குத் தட்டுப்பாடு இல்லை. செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி லாபம் அடைய முயற்சிப்போா் மீது மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு டைஅமோனியம் பாஸ்ஃபேட்(டிஏபி) உரம் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு தேதி மற்றும் வாரம் வாரியாக செயல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

45 கிலோ எடைகொண்ட யூரியா மூட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.266. ஐம்பது கிலோ எடைகொண்ட டிஏபி மூட்டை ஒன்றின் விலை ரூ.1,350 என்றாா்.

‘ஓய்ஆா் 4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகரிப்பு’

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்ப... மேலும் பார்க்க

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா். போதைப் பொருள் தடுப்பு பிரிவி... மேலும் பார்க்க

விசா மறுப்பு: அமெரிக்காவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முற்றுகை

பெண் ஒருவருக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க மறுத்ததால், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை சிலா் முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

இந்திய மதுபானத்தை புகழ்ந்த ஸ்விட்சா்லாந்து அமைச்சா்: மாநிலங்களவையில் சுவாரசிய தகவல்

இந்திய தயாரிப்பு மதுபானம் ஒன்று சிறப்பாக உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ஸ்விட்சா்லாந்து அமைச்சா் கூறியது தனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தியதாக மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க