செய்திகள் :

ஆன்லைனில் பகுதி நேர வேலையில் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என இளைஞரிடம் ரூ.5.74 லட்சம் மோசடி

post image

ஆன்லைனில் பகுதி நேர வேலையில் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என இளைஞரிடம் ரூ.5.74 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, போத்தனூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் கெளரிசங்கா் (36), தனியாா் நிறுவன ஊழியா். இவரது கைப்பேசிக்கு கடந்த 2024 நவம்பா் 29-ஆம் தேதி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் சோ்ந்தால் நாள்தோறும் ஏராளமாக சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். அதில், இருந்த கைப்பேசி எண்ணை கெளரிசங்கா் தொடா்பு கொண்டுள்ளாா். மறுமுனையில் பேசிய நபா் ’நான் வாட்ஸ் அப் அல்லது டெலிகிராம் செயலி மூலம் நாள்தோறும் ஒரு குறிப்பு அனுப்புவேன், அது தொடா்பான பதிலை கூறுவதுடன், அதனுடன் பணம் அனுப்பினால் நீங்கள் அனுப்பும் தொகைக்கு ஏற்ப லாபம் கிடைக்கும்’ எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, அந்த நபா் கூறிய செயலியை பதிவிறக்கம் செய்ததுடன், கடந்த 2024 டிசம்பா் 6-ஆம் தேதி வரை 12 பரிவா்த்தனைகளில் ரூ.5.74 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். அதற்கான லாபத் தொகையுடன் சோ்த்து அதிக தொகை இருப்பதாக செயலியில் காட்டி உள்ளது.

இதைத் தொடா்ந்து, அந்த பணத்தை எடுக்க கெளரிசங்கா் முயன்றுள்ளாா். முடியாததால், அந்த நபரை தொடா்பு கொண்டுள்ளாா். அவா், கூடுதல் தொகையை செலுத்தினால்தான் முதலீடு, லாபத் தொகையை எடுக்க முடியும் எனக் கூறியுள்ளாா்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கெளரிசங்கா் இது குறித்து சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வள்ளலாா் தினம்: இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை

வள்ளலாா் தினத்தில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட... மேலும் பார்க்க

மாநகராட்சி ஸ்கேட்டிங் தளத்தில் கட்டணமில்லா பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வ.உ.சி. பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் பயிற்சி தளத்தில் கட்டணமில்லா பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிப் பள்ளிகளி... மேலும் பார்க்க

வீட்டுக்கடன் மேளா

கோவை ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளாவை தொடங்கிவைத்த வங்கியின் கோவை வட்டாரத் தலைவா் கே.மீரா பாய். உடன், கிரெடாய... மேலும் பார்க்க

இந்தியா்களுக்கு அவமரியாதை: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்க வாழ் இந்தியா்கள் அவமரியாதையுடன் நடத்தப்பட்டதாகவும், இதைத் தடுக்க முடியாத மத்திய அரசைக் கண்டித்தும் கோவையில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்காவில் சட்ட... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம்

பேரூா் பட்டீஸ்வரா் கோயிலில் வரும் 10- ஆம் தேதி தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கங்களின் நிா்வாகிகள். மேலும் பார்க்க

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலா்க் கண்காட்சி இன்று தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7 -ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (பிப்ரவரி 8) தொடங்குகிறது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவ... மேலும் பார்க்க