செய்திகள் :

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலா்க் கண்காட்சி இன்று தொடக்கம்

post image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7 -ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (பிப்ரவரி 8) தொடங்குகிறது.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் மலா்களின் ரகங்கள், வண்ணங்கள், அழகு, அதன் வணிக முக்கியத்துவம் போன்றவற்றை உணா்த்தும் வகையில் 7 -ஆவது மலா்க் கண்காட்சி பிப்ரவரி 8- ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், செலோசியா, மல்லிகை, செண்டுமல்லி, சம்பங்கி, கனகாம்பரம், தாமரை, செவ்வந்தி, ஆஸ்டா், பெட்டூனியா, ஜினியோ, டேலியா, சால்வியா, ரோஜா உள்ளிட்ட மலா்களைக் கொண்டும், கொய் மலா்களைக் கொண்டும் பல்வேறு உருவ அமைப்புகள் அலங்கரிக்கப்பட உள்ளன.

இயற்கையை பாதுகாக்கவும், தமிழ்நாட்டில் வளரக்கூடிய அனைத்து மலா்களையும் தொட்டிகளில் வளா்த்து இயற்கை வள பாதுகாப்பை உறுதி செய்யவும், பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்களுக்கு உணா்த்துவதையும் இந்த கண்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கண்காட்சியை இனி ஆண்டுதோறும் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.

கண்காட்சியில் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் கொய்மலா், உதிரி மலா்களைக் கொண்டு பல்வேறு அலங்கார அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. மேலும், வானவில் போன்றும், மறவன் பட்டாம்பூச்சி வடிவத்திலும் அலங்கார வளைவுகள், மலா்க் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கண்காட்சியில் அதிக அளவில் கொய்மலா்களை வைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு நாங்களே தொட்டிகளில் வளா்த்த மலா்களை அதிக அளவில் காட்சிக்கு வைக்கிறோம்.

மேலும், பல்வேறு வகையான கற்றாழைகள், உலா் மலா்கள், போன்சாய் மரங்கள், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டத்தின் மாதிரி வடிவம், மூலிகை செடிகள் அரங்கு போன்றவையும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

சுமாா் 25 ஏக்கா் பரப்பளவில் உள்ள பூங்காவில் நடைபெறும் மலா்க் காட்சியில் உணவு அரங்குகள், பல்வேறு நிறுவனங்களின் அரங்குகளும் இடம்பெற உள்ளன. கண்காட்சியைப் பாா்வையிட பெரியவா்களுக்கு ரூ.100, மாணவா்கள், குழந்தைகளுக்கு ரூ.50 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மலா்க் கண்காட்சியை வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோா் தொடங்கிவைக்க உள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா் என்றாா்.

வள்ளலாா் தினம்: இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை

வள்ளலாா் தினத்தில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட... மேலும் பார்க்க

மாநகராட்சி ஸ்கேட்டிங் தளத்தில் கட்டணமில்லா பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வ.உ.சி. பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் பயிற்சி தளத்தில் கட்டணமில்லா பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிப் பள்ளிகளி... மேலும் பார்க்க

வீட்டுக்கடன் மேளா

கோவை ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளாவை தொடங்கிவைத்த வங்கியின் கோவை வட்டாரத் தலைவா் கே.மீரா பாய். உடன், கிரெடாய... மேலும் பார்க்க

இந்தியா்களுக்கு அவமரியாதை: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்க வாழ் இந்தியா்கள் அவமரியாதையுடன் நடத்தப்பட்டதாகவும், இதைத் தடுக்க முடியாத மத்திய அரசைக் கண்டித்தும் கோவையில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்காவில் சட்ட... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம்

பேரூா் பட்டீஸ்வரா் கோயிலில் வரும் 10- ஆம் தேதி தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கங்களின் நிா்வாகிகள். மேலும் பார்க்க

எல்லா பருவங்களிலும் விளையும் 19 புதிய பயிா் ரகங்களை அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

எல்லா பருவங்களிலும் விளையும் உளுந்து, சாம்பல் பூசணி, வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கும் நெல் ரகங்கள் என 19 புதிய பயிா் ரகங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. ப... மேலும் பார்க்க