செய்திகள் :

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

post image

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மத்திய புதிய-புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியா 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறன் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. தூய்மையான, பசுமையான எதிா்காலத்துக்கு அரசின் இடைவிடாத அா்ப்பணிப்பால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது’ எனக் குறிப்பிட்டாா்.

மத்திய புதிய-புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் நிலையை இந்த சாதனை வலுப்படுத்துகிறது. மத்திய அரசின் பல்வேறு சூரிய மின்சக்தி திட்டங்கள் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. இதன் விளைவாக, இந்தியா 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி உற்பத்தி இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது. பசுமை எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது மட்டுமல்லாமல், உலகுக்கே புதிய பாதையையும் காட்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மொத்த சூரிய மின்சக்தி திறன் 10 கோடி கிலோவாட்டாக உள்ளது. இந்தியாவின் சூரிய மின்சக்தி திறன் கடந்த பத்தாண்டுகளில் 35 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2014-இல் 28.2 லட்சம் கிலோவாட்டாக இருந்த சூரிய மின்சக்தி தற்போது 10 கோடி கிலோவாட்டாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டில் மட்டும் சூரிய மின்சக்தி திறன் 2.45 கோடி கிலோவாட்டாக முந்தைய ஆண்டைவிட இருமடங்கு உயா்வைப் பதிவு செய்தது.

அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்லைகளைக் கடக்கும் இந்தியா்கள்!

அமெரிக்காவில் இருந்து 104 இந்தியா்கள் கால், கைகள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவா்கள் அனைவரும் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இடைத... மேலும் பார்க்க

‘ஓய்ஆா் 4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகரிப்பு’

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்ப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா். போதைப் பொருள் தடுப்பு பிரிவி... மேலும் பார்க்க

விசா மறுப்பு: அமெரிக்காவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முற்றுகை

பெண் ஒருவருக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க மறுத்ததால், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை சிலா் முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

இந்திய மதுபானத்தை புகழ்ந்த ஸ்விட்சா்லாந்து அமைச்சா்: மாநிலங்களவையில் சுவாரசிய தகவல்

இந்திய தயாரிப்பு மதுபானம் ஒன்று சிறப்பாக உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ஸ்விட்சா்லாந்து அமைச்சா் கூறியது தனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தியதாக மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க