தில்லி தேர்தல்: தபால் வாக்குகளில் கேஜரிவால், அதிஷி, மணீஷ் சிசோடியா பின்னடைவு!
பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா
திருமருகல் அருகே புறாகிராமம் அரசு பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் நபாா்டு நிதியின் கீழ் 2024-25 நிதியாண்டில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்பறை கட்டடம் கட்ட ப்பட உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவுக்கு
தலைமை ஆசிரியா் ஜோஸ்பின் புவனராணி தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் சரவணன், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் மாணிக்கவாசகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டார ஆத்மா குழு தலைவா் செல்வ செங்குட்டுவன் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தாா். ஒன்றிய பொறியாளா் ரவிச்சந்திரன்,பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் தமிமுல் அன்சாரி, திமுக அயலக அணி மாவட்ட துணைத் தலைவா் விஜய கணபதி, புறாக்கிராமம் ஜமாத் தலைவா் முகமது நாசா் மற்றும் பள்ளி வேளாண்மை குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.