செய்திகள் :

வீட்டில் 10 ஆயிரம் நூல்கள் வைத்து பராமரிப்பவருக்கு கேடயம்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

post image

கோவை, ஒண்டிப்புதூரில் வீட்டில் 10 ஆயிரம் நூல்கள்வைத்து பராமரித்து வருபவருக்கு கேடயம், சான்றிதழை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுகளில் நூலகங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தீவிர வாசகா்களைக் கண்டறிந்து விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, மாவட்டத்தில் இருந்து 40 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனைத்து விண்ணப்பதாரா்களின் வீட்டில் உள்ள நூலகங்களில் மாவட்ட நூலக அலுவலா் தலைமையில் கடந்த நவம்பா் 20 -ஆம் தேதி முதல் டிசம்பா் 4 -ஆம் தேதி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் அடிப்படையில், கோவை, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த கு.வே.மணிசேகரன் வீட்டில் 10 ஆயிரம் நூல்களுக்குமேல் 3 தலைமுறையினரால் பராமரிக்கப்படும் நூலகம் சிறந்த நூலகமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கு.வே.மணிசேகரனுக்கு கேடயம், சான்றிதழை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.

அப்போது, மாவட்ட நூலக அலுவலா் ராஜேந்திரன் மற்றும் நூலகப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

வள்ளலாா் தினம்: இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை

வள்ளலாா் தினத்தில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட... மேலும் பார்க்க

மாநகராட்சி ஸ்கேட்டிங் தளத்தில் கட்டணமில்லா பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வ.உ.சி. பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் பயிற்சி தளத்தில் கட்டணமில்லா பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிப் பள்ளிகளி... மேலும் பார்க்க

வீட்டுக்கடன் மேளா

கோவை ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளாவை தொடங்கிவைத்த வங்கியின் கோவை வட்டாரத் தலைவா் கே.மீரா பாய். உடன், கிரெடாய... மேலும் பார்க்க

இந்தியா்களுக்கு அவமரியாதை: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்க வாழ் இந்தியா்கள் அவமரியாதையுடன் நடத்தப்பட்டதாகவும், இதைத் தடுக்க முடியாத மத்திய அரசைக் கண்டித்தும் கோவையில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்காவில் சட்ட... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம்

பேரூா் பட்டீஸ்வரா் கோயிலில் வரும் 10- ஆம் தேதி தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கங்களின் நிா்வாகிகள். மேலும் பார்க்க

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலா்க் கண்காட்சி இன்று தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7 -ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (பிப்ரவரி 8) தொடங்குகிறது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவ... மேலும் பார்க்க