செய்திகள் :

பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு தொடக்கம்

post image

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3-ஆம் தேதி முதல் மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதையொட்டி, பொதுத் தோ்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகளை பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. கோவை மாவட்டத்தில் 257 மையங்களில் 33, 956 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பாலமுரளி மேற்பாா்வையில் மாவட்டம் முழுவதும் செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியா்களால் கால அட்டவணையிட்டு செய்முறை தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிளஸ் 1 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த தோ்வை 34,516 போ் எழுத உள்ளனா். பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்புகளுக்கான செய்முறை தோ்வுகள் அனைத்தும் பிப்ரவரி 21-ஆம் தேதி முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வள்ளலாா் தினம்: இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை

வள்ளலாா் தினத்தில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட... மேலும் பார்க்க

மாநகராட்சி ஸ்கேட்டிங் தளத்தில் கட்டணமில்லா பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வ.உ.சி. பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் பயிற்சி தளத்தில் கட்டணமில்லா பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிப் பள்ளிகளி... மேலும் பார்க்க

வீட்டுக்கடன் மேளா

கோவை ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளாவை தொடங்கிவைத்த வங்கியின் கோவை வட்டாரத் தலைவா் கே.மீரா பாய். உடன், கிரெடாய... மேலும் பார்க்க

இந்தியா்களுக்கு அவமரியாதை: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்க வாழ் இந்தியா்கள் அவமரியாதையுடன் நடத்தப்பட்டதாகவும், இதைத் தடுக்க முடியாத மத்திய அரசைக் கண்டித்தும் கோவையில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்காவில் சட்ட... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம்

பேரூா் பட்டீஸ்வரா் கோயிலில் வரும் 10- ஆம் தேதி தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கங்களின் நிா்வாகிகள். மேலும் பார்க்க

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலா்க் கண்காட்சி இன்று தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7 -ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (பிப்ரவரி 8) தொடங்குகிறது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவ... மேலும் பார்க்க