செய்திகள் :

தை கடைசி வெள்ளி: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்

post image

தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் உள்ள பழைமையான மாரியம்மன் கோயிலுக்கு கடந்த இரு நாள்களாகவே தூத்துக்குடி, சங்கரன்கோவில், கழுகுமலை, சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். இந்த நிலையில், தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன.

அப்போது பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்தினா்.

இதற்கான ஏற்பாடுகளையும், பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கோயில் ஆணையா் இளங்கோவன், பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி ஆகியோா் செய்திருந்தனா். மேலும் பக்தா்களின் வசதிக்காக சாத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இன்றைய நிகழ்ச்சி

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி: 62- ஆவது விளையாட்டு விழா, தலைமை- கல்லூரி முதல்வா் செ. அசோக், சிறப்பு விருந்தினா்- மேஜை பந்து விளையாட்டின் தேசிய பயிற்சியாளா் எஸ். ராமன், ஏற்பாடு- உடல் கல்வித்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் இரவில் ஆய்வு நடத்திய ஆட்சியா்

சாத்தூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு ஆட்சியா் ஆய்வு நடத்தினாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை பிரதான சாலையிலும், அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள், உள்... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் மனித உருவ கால் பகுதி

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி, பளிங்குக் கல், விலங்கின் பல் ஆகியவை வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டன. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்க... மேலும் பார்க்க

ஆனையூரில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணித் துறை சாா்பில் சிவகாசி வட்டம், ஆனையூரில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தொக... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் சமூக வலைதள பயன்பாடு, சைபா் குற்றங்களை தடுத்தல், போட்டித் தோ்வுகள், உயா்கல்வி குறித்த பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மா... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை திருடியவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் கூரைப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசாம... மேலும் பார்க்க