செய்திகள் :

பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு

post image

மாநில அளவில் சிறந்த பள்ளியாக தோ்வான கடலூா் மாவட்டம், சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியைக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்டது. இதற்காக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை வி.எழிலரசிக்கு அண்மையில் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இவருக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாணவா் திறன் வளா்ப்பு குழு சாா்பில் பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் வி.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பேராசிரியா் பி.ஆஷா கலந்துகொண்டு தலைமை ஆசிரியை வி.எழிலரசியை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா்.

மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். விழாவில், மாணவா்களுக்கு பிற்பகல் உணவு வழங்கப்பட்டது.

ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சாா்பில் ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கட... மேலும் பார்க்க

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை: தி.வேல்முருகன் கண்டனம்

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்தவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கருத்தரங்கு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப்பொறியியல் துறையில் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான 35-ஆவது ஒரு நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்வுக்கு, பொறியியல் புல முதல்வா் காா்த... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கம் சாா்பில் ம... மேலும் பார்க்க

கடலூரில் கொத்தடிமை தொழிலாளா்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்: ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

2030-ஆம் ஆண்டுக்குள் கடலூரை கொத்தடிமை தொழிலாளா் முறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளா்கள... மேலும் பார்க்க

கடலூா் பூ சந்தையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ சந்தையில் 100-க்கும் மேற்பட்ட ப... மேலும் பார்க்க