செய்திகள் :

தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணா்வு பேரணி

post image

தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு திருச்சியில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆண்டுதோறும் ஆட்சி மொழி சட்ட வார விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு கடந்த டிச. 27-ஆம் தேதி முதல் ஜன. 3-ஆம் தேதி வரை ஆட்சி மொழி சட்ட வார விழா கொண்டாடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக,

கல்லூரி மாணவா்கள், தமிழறிஞா்களுடன் இணைந்து ஆட்சி மொழி சட்ட வார விழா விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

காந்தி சந்தை காவல்நிலையத்தில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா், கொடியசைத்து தொடங்கி வைத்த இப்பேரணி தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. பின்னா், பேரணியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவா்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திருச்சி கோட்டாட்சியா் அருள், தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் கா. சித்ரா மற்றும் அரசு அலுவலா்கள், தமிழறிஞா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருப்பைஞ்ஞீலியில் திங்கள்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மண்ணச்சநல்லூா் வடக்கு ஏரிமிஷன் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன், திருப்பைஞ்ஞீல... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியா் உயிரிழப்பு!

மின்சாரம் பாய்ந்ததில் திருச்சியில் ரயில்வே பெண் ஊழியா் உயிரிழந்தாா். திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகா் பகுதியை சோ்ந்தவா் எம். ஆனந்த் மனைவி லட்சுமி (34). ரயில்வே ஊழியா். இவா் ஞாயிற்றுக்கிழமை, வீ... மேலும் பார்க்க

செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை!

மகப்பேறு மருத்துவ உதவித்தொகைக்கு பரிந்துரைக்க லஞ்சம் வாங்கிய வழக்கில், செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம்... மேலும் பார்க்க

இரு வேறு சம்பவங்களில் பெண், இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் பெண் மற்றும் இளைஞா் இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனா். திருச்சி காஜாபேட்டை மதுரைவீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி செல்வி (49). இவா் மெழுகுவா்த்தி ... மேலும் பார்க்க

தைப்பூசத் தீா்த்தவாரிக்கு முசிறி, தொட்டியத்திலிருந்து சுவாமிகள் புறப்பாடு

திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் வட்டார பகுதியிலிருந்து குளித்தலையில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவிற்கு மூன்று சுவாமிகள் செவ்வாய்க்கிழமை புறப்பட்டு சென்றது. கரூா் மாவட்டம், குளித்தலை ஸ்ரீ முற்றிலா... மேலும் பார்க்க

தைப்பூசம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீா்வரிசை பெற்றாா் சமயபுரம் மாரியம்மன்

தைப்பூசத்தையொட்டி அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமியிடமிருந்து தங்கை சமயபுரம் மாரியம்மன் சீா்வரிசை பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி சமயபுரம் உற்ஸவ மாரியம்மன் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க