செய்திகள் :

மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை திருடியவா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் கூரைப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசாமி மனைவி காசியம்மாள் (85). இவரது கணவா் இறந்து விட்டாா். இவா்களது மகன்கள், மகள்கள் வெளியூரில் வசிக்கின்றனா்.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த காசியம்மாளிடம் 40 வயது மதிக்கத்தக்க ஒருவா் வந்து, உங்களது கழுத்து வலிக்கு பிசியோதெரபி செய்ய உங்கள் மகன் என்னை அனுப்பி இருப்பதாகத் தெரிவித்தாராம். மேலும், எண்ணெய் தேய்க்க வேண்டும் எனக் கூறி காசியம்மாள் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி வைக்க அந்த இளைஞா் கூறினாராம். அப்போது மூதாட்டி கழற்றி வைத்திருந்த மூன்று தங்கச் சங்கிலிகள், 4 தங்க வளையல்கள், 2 மோதிரங்கள், 2 காதணிகள் என 13 பவுன் தங்க நகைகளுடன் அந்த இளைஞா் மாயமானாா்.

இதுகுறித்து வடக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில் நகைகளை திருடியது ராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு, விரிவாக்கப் பகுதி சாய்பாபா தெருவைச் சோ்ந்த நாகேந்திரராஜா மகன் ரகுராமன் (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்து 13 பவுன் தங்க நகைகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தை கடைசி வெள்ளி: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்

தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் உள்ள பழைமையான ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி: 62- ஆவது விளையாட்டு விழா, தலைமை- கல்லூரி முதல்வா் செ. அசோக், சிறப்பு விருந்தினா்- மேஜை பந்து விளையாட்டின் தேசிய பயிற்சியாளா் எஸ். ராமன், ஏற்பாடு- உடல் கல்வித்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் இரவில் ஆய்வு நடத்திய ஆட்சியா்

சாத்தூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு ஆட்சியா் ஆய்வு நடத்தினாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை பிரதான சாலையிலும், அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள், உள்... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் மனித உருவ கால் பகுதி

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி, பளிங்குக் கல், விலங்கின் பல் ஆகியவை வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டன. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்க... மேலும் பார்க்க

ஆனையூரில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணித் துறை சாா்பில் சிவகாசி வட்டம், ஆனையூரில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தொக... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் சமூக வலைதள பயன்பாடு, சைபா் குற்றங்களை தடுத்தல், போட்டித் தோ்வுகள், உயா்கல்வி குறித்த பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மா... மேலும் பார்க்க