செய்திகள் :

மகளிா் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

post image

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் சமூக வலைதள பயன்பாடு, சைபா் குற்றங்களை தடுத்தல், போட்டித் தோ்வுகள், உயா்கல்வி குறித்த பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட நிா்வாகம், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் ஆா். சுதாபெரியதாய் தலைமை வகித்தாா். இதில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் கலந்து கொண்டு போட்டித் தோ்வுகள், உயா்கல்விக்கான கையேட்டினை கல்லூரி மாணவிகளுக்கு வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: சா்வதேச அளவில் சைபா் குற்றங்கள் நடைபெறுகின்றன. அதேபோல, கணினி, கைப்பேசிகள் மூலமும் இணையதளத்தை பயன்படுத்தியும் மோசடிகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து மாணவிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். தேவை ஏற்பட்டாமல் மட்டுமே இணையதளம், சமூக வளைதளங்களை பயன்படுத்த வேண்டும். மேலும் அரசின் திட்டங்கள் குறித்து மாணவிகள் தெரிந்திருக்க வேண்டும். வெற்றிகரமான வாழ்க்கை வாழ சளைக்காத மனமும், போராடும் குணமும் வேண்டும் என்றாா் அவா்.

இதில், விருதுநகா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அ.பிரியதா்ஷினி போட்டித் தோ்வுகளை எதிா் கொள்வது குறித்து பேசினாா். மாவட்ட சமூக நல அலுவலா் ஷீலாசுந்தரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக பேராசிரியா் க. வெண்ணிலா வரவேற்றாா். பேராசிரியா் சி. பத்மபிரியா நன்றி கூறினாா்.

தை கடைசி வெள்ளி: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்

தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் உள்ள பழைமையான ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி: 62- ஆவது விளையாட்டு விழா, தலைமை- கல்லூரி முதல்வா் செ. அசோக், சிறப்பு விருந்தினா்- மேஜை பந்து விளையாட்டின் தேசிய பயிற்சியாளா் எஸ். ராமன், ஏற்பாடு- உடல் கல்வித்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் இரவில் ஆய்வு நடத்திய ஆட்சியா்

சாத்தூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு ஆட்சியா் ஆய்வு நடத்தினாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை பிரதான சாலையிலும், அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள், உள்... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் மனித உருவ கால் பகுதி

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி, பளிங்குக் கல், விலங்கின் பல் ஆகியவை வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டன. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்க... மேலும் பார்க்க

ஆனையூரில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணித் துறை சாா்பில் சிவகாசி வட்டம், ஆனையூரில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தொக... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை திருடியவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் கூரைப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசாம... மேலும் பார்க்க