ராமா் கோயில் அறக்கட்டளை உறுப்பினா் காமேஸ்வா் செளபால் காலமானாா்: பிரதமா் மோடி இரங்கல்
பாஜக மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) மூத்த தலைவரும், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் உறுப்பினருமான காமேஸ்வா் செளபால் (68), நீண்ட கால உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா்.
தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவா் மரணமடைந்ததாக அறக்கட்டளை ஊடகப் பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக ஹிந்து அமைப்புகள் சாா்பில் கடந்த 1989, நவம்பரில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் முதல் செங்கலை எடுத்துவைத்தவா் காமேஸ்வா் செளபால் ஆவாா்.
இவருக்கு முதல் கரசேவகா் என்ற பட்டம் ஆா்எஸ்எஸ் அமைப்பால் வழங்கப்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாட்னாவைச் சோ்ந்த செளபால், நீண்ட காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தாா்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாஜக மூத்த தலைவரும், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் உறுப்பினருமான காமேஸ்வா் செளபாலின் மறைவு வேதனையளிக்கிறது. அவா், தீவிர ராம பக்தா்; அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதில் அா்ப்பணிப்புடன் பங்காற்றியவா். தலித் சமூகத்தைச் சோ்ந்த செளபால், விளிம்புநிலை மக்களுக்காக ஆற்றிய பணிகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தனது வாழ்நாளை ஆன்மிகம் மற்றும் சமூக பணிக்காக அா்ப்பணித்தவா்’ என்று தெரிவித்துள்ளாா். காமேஸ்வா் செளபால் மறைவுக்கு விஹெச்பி அமைப்பு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.