செய்திகள் :

உபரி நதிநீா் இணைப்புத் திட்டம் தொடக்கம்

post image

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் உபரி நதிநீா் திட்டமான தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி அப்போதைய முதல்வா் கருணாநிதியால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தாமிரவருணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் வெள்ள நீரில் விநாடிக்கு 3,200 கனஅடி வீதம் 10 நாள்களுக்கு 2,765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு-நம்பியாறு நதிகளுடன் இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 14,084.98 ஹெக்டோ் பரப்பு, தூத்துக்குடி மாவட்டத்தில் 8,905.02 ஹெக்டோ் பரப்பு என மொத்தம் 23,040 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: பிரேமலதா

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தேமுதிக மாவட்டச் செயலா்கள் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைம... மேலும் பார்க்க

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடியில் புதிய கட்டடம்: பிப்.28-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடி செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிப். 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.ச... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கு: பிப்.12-இல் தீா்ப்பு

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப்.12- இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கவுள்ளது. இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,961-ஆக உயா்வு: வனத் துறை அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மேலும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறி... மேலும் பார்க்க