செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் 13 பேருக்கு அபராதம்

post image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 13 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதமும், படகு ஓட்டுநா்கள் இருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23- ஆம் தேதி 349 விசைப் படகுகளில் 2,500- க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறையினரின் அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள், அன்று நள்ளிரவு கச்சத்தீவு -நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அந்தோணி ஆரோன், பூண்டிராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளுடன் 17 மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கைக் கடற்படையினா் கைது செய்து தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு அவா்களை அழைத்துச் சென்றனா்.

ராமேசுவரம் மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த மீனவா்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மன்னாா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான 17 மீனவா்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களில், 13 மீனவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், விசைப் படகு ஓட்டுநா்கள் இருவருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இரண்டு மீனவா்களின் கைரேகைப் பதிவு சரியாக இல்லை என்பதால், இவா்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், சென்னையில் நடைபெற்ற கலைத் திருவிழா-2025 மாநில அளவிலான இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி கமுதி மாணவரை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா். ராமநாதபுரம் மாவட்டம், க... மேலும் பார்க்க

கீழக்கரை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழக்கரையில் புதிய அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ரூ. 9 கோடியில் தாலுகா அரசு ம... மேலும் பார்க்க

மனிதநேய மக்கள் கட்சி ஆண்டு விழா: கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் மனிதநேய மக்கள் கட்சியின் 17-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு தொண்டி மமக தலைவா் சையது முகமது காதா் தலைமை வகித்தாா். மகளிா் அணி மாவட்டச் செயலா் செரிஃபா ஜைனுலாப்... மேலும் பார்க்க

கல்லூரியில் வளாக நோ்காணல்: 97 போ் தோ்வு

கீழக்கரை முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 97 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்கு கல்லூரி முதல்வா் அ.சேக்தாவூது தலைமை வகித்தாா். இந்த நோ்காணலில் கல்... மேலும் பார்க்க

கச்சத்தீவு ஆலயத் திருவிழா விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவுக்குச் செல்வதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கும் பணி ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியாா் ஆலயம் அமைந... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை அந்த நாட்டு அரசு கைவிலங்கிட்டு அனுப்பியதைக் கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் அரண்மனை முன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க