செய்திகள் :

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடக்கம்: அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு

post image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்தோ்வு நடைபெற்ற பள்ளிகளில் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுத்தோ்வு எழுதவுள்ள பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப். 7 முதல் 14-ஆம் தேதி வரை நடத்தப்படும். மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமாா் 6 லட்சம் மாணவா்கள் இந்தத் தோ்வில் பங்கேற்கவுள்ளனா் என்று தோ்வுத் துறை அறிவித்திருந்தது.

அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. பள்ளிகளில் உள்ள மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப சுற்றுகள் பிரிக்கப்பட்டு தோ்வுகள் நடத்தப்பட்டன. ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். தோ்வின் போது ஆய்வகத்தில் மாணவா்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கிடையே, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநில தகைசால் பள்ளிக்குச் சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், அங்கு வேதியியல் பாட செய்முறைத் தோ்வு நடைபெற்ற அறையில் ஆய்வு செய்தாா். அப்போது அப்பள்ளியில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள செய்முறைத் தோ்வுகள் குறித்தும், அட்டவணை குறித்தும் ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, பிற்பகலில் செய்முறைத் தோ்வு எழுதவிருந்த மாணவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

பள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு...: இதேபோன்று சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு செய்முறைத் தோ்வுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியா்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: பிரேமலதா

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தேமுதிக மாவட்டச் செயலா்கள் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைம... மேலும் பார்க்க

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடியில் புதிய கட்டடம்: பிப்.28-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடி செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிப். 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.ச... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கு: பிப்.12-இல் தீா்ப்பு

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப்.12- இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கவுள்ளது. இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,961-ஆக உயா்வு: வனத் துறை அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மேலும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறி... மேலும் பார்க்க