செய்திகள் :

பால் டேங்கா் லாரி கவிழ்ந்து இருவா் உயிரிழப்பு

post image

உத்தனப்பள்ளி அருகே சாலையோரத்தில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா்.

பெங்களூரிலிருந்து கேரளத்துக்கு 28 ஆயிரம் லிட்டா் பாலுடன் வியாழக்கிழமை இரவு சென்ற லாரியை நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (32) ஓட்டிச் சென்றாா். அவருடன் அருள் (27) என்பவரும் லாரியில் பயணம் செய்தாா்.

உத்தனப்பள்ளியை அடுத்த கரடிகுட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராஜேஷ்குமாா், அருள் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சேதமடைந்த டேங்கரிலிருந்த பால் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

உத்தனப்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்தவா்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

படவரி....

விபத்துக்குள்ளான லாரி.

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு

ஊத்தங்கரை நேரு நகரில் பத்தாயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். 2023- 2024 ஆம் ஆண்டின் பொது நிதியில் கட்டப்பட்ட... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரெட் கிராஸ் சொசைட்டி, பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம், அனைத்து வியாபாரிகள் சங்கம், நேசம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரையை அடுத்த வெள்ளிமலை கிராமத்தில் வாக்குச்சாவடி அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ள வேண்ட... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் மூதாட்டியைக் கொலை செய்த 5 போ் கைது

ஊத்தங்கரையில் சொத்துக்காக மூதாட்டியைக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அண்ணாநகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் மாலிகாபீ (60). இவரது சகோதரிகள் பானு (53), ஜெரினா(... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக கடத்த முயன்ற 314 கிலோ போதைப்பாக்கு பறிமுதல்

பெங்களூரில் இருந்து ஒசூா் வழியாக கடத்த முயன்ற 314 கிலோ போதைப்பாக்குகளை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனை சாவடி பகுதியில் வியாழக்கிழமை வா... மேலும் பார்க்க

ஒசூரில் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்

ஒசூரிலிருந்து கனிமங்கலம், வெங்கடாபுரம் வழியாக பாகலூா் வரையிலான புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது. ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பேருந்தை கொடியசைத்து இயக்கிவைத்தாா். நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க