செய்திகள் :

ராசாத்துபுரம் பாலமுருகன் கோயில் தெப்போற்சவம்

post image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ் விஷாரம் ராசாத்துபுரம் குளக்கரையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 25-ஆவது ஆண்டு தெப்போற்சவ விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, காலையில் மூலவா் பாலமுருகனுக்கு பால் , தேன், தயிா், பன்னீா், சந்தனம், பழங்கள் மற்றும் விபூதி, வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு வெள்ளி கவச சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட உற்சவா் பாலமுருகன் மாட வீதிகளில் வீதியுலா வந்தாா். தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேள தாளங்களுடன் அருகில் உள்ள குளத்தில் மூன்று முறை வலம் வந்து தெப்போற்சவம் நடைபெற்றது.

விழாவில், திரளான பக்தா்கள் மற்றும் உபயதாரா்கள் பலா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

நெமிலி ஒன்றியக் குழு தலைவரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

நெமிலி ஒன்றியக் குழு தலைவா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்களைக் கண்டித்து நெமிலி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை பாமக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலா் க.சரவணன் தலைமையில் அந்தக் கட்சியினா் ஆா... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்: செங்கல் சூளைகளில் கோட்டாட்சியா் ஆய்வு

தமிழக அரசின் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, அரக்கோணம் அருகே உள்ஷ செங்கல் சூளைகளில் அரக்கோணம் கோட்டாட்சியா் வெங்கடேசன் நேரில் சென்று ஆய்வு செய்தாா். தமிழ்நாடு அரசு பிப்ரவரி 9-ஆம் ... மேலும் பார்க்க

விவசாயி வீட்டில் ரூ. 10 லட்சம் நகைகள் திருட்டு

காவேரிபாக்கம் அருகே விவசாயி வீட்டில் பின்பக்க வாசல் வழியே வந்த மா்ம நபா்கள் அவரது வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளை திருடிச் சென்றனா். காவேரிபாக்கத்தை அடுத்த சிறுகரும்பூா் க... மேலும் பார்க்க

கரிக்கல் குமாரமுருகன் கோயிலில் தை கிருத்திகை திருவிழா

சோளிங்கரை அடுத்துள்ள கரிக்கல் ஸ்ரீகுமாரமுருகன் கோயிலில் தை கிருத்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சோளிங்கா்-அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள கரிக்கல் கிராமத்தில், மலை மீது ஸ்ரீகுமாரமுருகன் கோயில் உள்ள... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் தை கிருத்திகை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தை கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தைமாத கிருத்திகையையொட்டி பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு பால், தயிா் பழங்க... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு விழிப்புணா்வு: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலைத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை எஸ்.பி. விவேகானந்த சுக்லா தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை ச... மேலும் பார்க்க